ைரஃபல் ரேஞ்சில் இயற்கைப் பூங்கா திறக்கப்பட்டது

ைரஃபல் ரேஞ்சில் இயற்கைப் பூங்கா திறக்கப்பட்டது

2 mins read
db46c937-ffd8-4fc9-a787-5a89a7debe37
ரைஃபல் ரேஞ்ச் இயற்­கைப் பூங்காவின் பராமரிப்புத் தேவைகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒளி மின்னழுத்த சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகடுகள் மணிக்கு 57 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோனலிசா

சிங்­கப்­பூ­ரின் புதிய இயற்­கைப் பூங்­கா­வான ரைஃபல் ரேஞ்ச் இயற்­கைப் பூங்கா நேற்று திறக்­கப்­பட்­டது. மத்­திய நீர்த்­தேக்­கப் பகுதி, புக்­கிட் தீமா இயற்­கைப் பூங்கா ஆகி­யவை அடங்­கிய மத்­திய இயற்­கைப் பூங்கா கட்­ட­மைப்­பில் தேசிய பூங்­காக் கழ­கம் திறந்­துள்ள எட்­டா­வது இயற்­கைப் பூங்கா இது­வா­கும்.

புக்­கிட் தீமா இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­கு­தி­யின் தெற்­குப் பகு­தி­யில், ரைஃபல் ரேஞ்ச் சாலை­யில் அமைந்­துள்ள பூங்கா 66 ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்டது. அப்­பூங்­கா­வில் ஏழு கிலோ­மீட்­டர் நீள­மு­டைய நடை­ப­யண வழித் தடங்­களும் பலகை மேல் நடக்­கும் வசதி­களும் உள்­ளன. சிறார்­களும் உடற்­கு­றை­ உ­ள்ளோரும் சக்­கர நாற்­கா­லி­யின் உத­வி­யு­டன் தடை­யற்ற வகை­யில் பய­ணிக்­க முடியும்.

ரைஃபல் ரேஞ்ச் இயற்­கைப் பூங்கா டவுன்­டௌன் ரயில்­பாதை­யின் பியூட்டி வேர்ல்ட் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு மிக அரு­கில் அமைந்­துள்­ளது.

பொது­மக்­கள் இந்­நி­லை­யத்­தி­லி­ருந்து நடந்தே இப்­பூங்­கா­வின் ரம்பை பலகை வழித்­த­டத்தை வந்­த­டை­ய­லாம்.

அப்­பூங்­கா­வில் புனு­குப் பூனை, கோலுகோ, பறக்­கும் அணில், அழிந்­து­வ­ரும் இன­மான சுண்டா பாங்­கோ­லின் உள்­ளிட்ட 400க்கும் மேற்­பட்ட அரிய வகை உயி­ரி­னங்களும் மரம், செடி, கொடி வகை­க­ளும் உள்ளன.

நேற்­றைய திறப்புவிழா­வில் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்­டார்.

"2030ஆம் ஆண்­டிற்­குள் சிங்­கப்­பூ­ரில் இதுபோன்ற மேலும் ஐந்து இயற்­கைப் பூங்­காக்­கள் அமைக்­கப்­படும். வருங்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரர் ஒவ்­வொ­ரு­வ­ரின் இல்­லத்­தி­லி­ருந்­தும் பத்து நிமிட நடை தூரத்­தில் ஒரு பூங்­காவை அமைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்று திரு வோங் கூறி­னார்.

துணைப் பிர­த­மர் வோங்­கும் நிகழ்ச்­சி­யில் அவ­ரு­டன் கலந்­து­கொண்ட தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீயும், தேசிய பூங்­காக் கழ­கத்­தின் ஒரு மில்­லி­யன் மரங்­கள் நடும் திட்­டத்தையொட்டி, ரைஃபல் ரேஞ்ச் இயற்­கைப் பூங்­கா­வில் மரங்­களை நட்­ட­னர்.

பார்­வை­யா­ளர்களைக் கவ­ரும் வண்­ணம் 31 மீட்­டர் உய­ரத்­தி­ லிருந்து பூங்­கா­வின் மொத்த பரப்­ப­ள­வை­யும் காணும் வகை­யில் 'பார்க்­கும் தளம்' ஒன்­றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வி­டம் 1950களில் கிரா­னைட் குவா­ரி­யாக இருந்தது. அதன் சுற்­றுப்­ப­கு­தி­யில் கிரா­மங்­களும் இருந்­தன.

பின்­னர் சிங்­கப்­பூர் துப்­பாக்கி அணி­யின் பரா­ம­ரிப்­பில் துப்­பாக்­கிச் சூட்­டுப் பயிற்­சி­கள் நடை­பெற்றதால் அவ்­வி­டம் ரைஃபல் ரேஞ்ச் என பெயர்­பெற்­றது.