தமிழ் வழியில் மருத்துவம்: தமிழக அரசுக்கு அமித் ஷா கோரிக்கை

2 mins read

தமிழ் வழி­யில் மருத்­து­வம், நிபுணத்­து­வப் படிப்­பு­களை அறி­மு­கப்­ப­டுத்­தும்­படி தமி­ழக அர­சுக்கு இந்­தி­யா­வின் உள்­துறை அமைச்­சர் அமித் ஷா வேண்­டு­கோள் விடுத்துள்ளார்.

"தாய்­மொழி தமிழைப் பாட போதனை மொழி­யாக ஆக்­கி­னால் தமிழ் வழி­யில் படிக்­கும் மாண­வர்­கள் சிறந்த முறை­யில் பாடங்­களைப் புரிந்­து­கொள்ள முடி­யும். உயர்­கல்வி­யைத் தொடர வச­தி­யாக இருக்­கும். தாங்­கள் எடுத்து படிக்­கும் பாடங்­களில் மேலும் ஆய்­வு­களை அவர்­கள் நடத்­த­லாம்," என்று அமித் ஷா தெரி­வித்­தார்.

சென்­னை­யில் சனிக்­கி­ழமை இந்தியா சிமெண்ட் நிறு­வ­னத்­தின் பவ­ள­விழா­வில் உரை­யாற்­றிய அமித் ஷா, தமிழ் மொழி மிகவும் தொன்­மை­யா­னது. வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த அந்த மொழி­யின் அரு­மை­யைத் தெரிந்­து­கொள்­ளும் வகை­யில் மருத்­து­வம், பொறி­யி­யல் படிப்­பு­களைத் தமிழ் வழி­யில் போதிக்க வேண்­டும் என்று கூறினார்.

உல­கின் ஆகப் பழ­மை­யான மொழி­களில் ஒன்­றான தமிழை மேம்­ப­டுத்­து­வது இந்­தியா முழு­வ­தற்­கும் உள்ள பொறுப்பு என்றாரவர்.

தமிழ் வழி­யில் மருத்­து­வம், நிபுணத்­து­வப் படிப்­பு­களைப் போதிக்க தமிழ்­நாடு அரசு தொடங்­கி­னால், அது தமிழ் மொழி­யின் மேம்­பாட்­டிற்கு மாபெ­ரும் சேவை­யா­கக் கரு­தப்­படும் என்று உள்­துறை அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வின் அதி­கா­ர­பூர்வ மொழி­கள் பற்­றிய நாடா­ளு­மன்­றக் குழு அண்­மை­யில் சில பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தது.

ஐஐடி, ஐஐ­எம் முத­லான உயர்­நி­லைக் கல்வி நிலை­யங்­களில் இந்தி மொழிப் பயன்­பாட்டை மேம்­படுத்த அந்­தக் குழு பரிந்­துரைத்தது. இதற்கு தமி­ழக முதல்­வர் மு. க. ஸ்டாலின் கடு­மை­யான எதிர்ப்பைத் தெரி­வித்து இருந்­தார்.

இந்­தச் சூழ­லில், அமித் ஷாவின் தமிழ் பயிற்று மொழி யோசனை முன்­வைக்­கப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, அமித் ஷாவின் கருத்­துக்குப் பதி­ல­ளித்த தமி­ழக உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பொன்­முடி, இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக தமி­ழில் பொறி­யி­யல் படிப்பை 2010ஆம் ஆண்­டி­லேயே தமி­ழக அரசு அறி­மு­கப்­படுத்­தி­யது என்­று குறிப்பிட்டார்.

அதே­போல, மருத்­து­வப் படிப்பைத் தமிழில் போதிப்­ப­தற்­கும் தமி­ழக அரசு தீவிர நட­வடிக்­கை­களை எடுத்து வரு­வ­தா­க­வும் இதற்­காக மூன்று பேரா­சி­ரி­யர்­கள் தலை­மை­யில் குழு அமைக்­கப்­பட்டு மொழி பெயர்ப்­புப் பணி­கள் வேக­மாக நடந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.