பூசலைத் தவிர்க்க உறுதி

பூசலைத் தவிர்க்க உறுதி

3 mins read
8f45d181-8df8-40ed-baa2-5abc07d426e6
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது நேரில் சந்தித்த சீன அதிபர் ஸி ஜின்பிங் (இடது), அமெரிக்க அதிபர் ஜோ பைடன். படம்: ஏஎஃப்பி -

எக்காலத்திலும் அணுவாயுதம் கூடாது: அமெரிக்க, சீன அதிபர்கள் திட்டவட்டம்

பாலித் தீவி­லி­ருந்து

இர்­ஷாத் முஹம்­மது

துணைச் செய்தி ஆசிரியர்

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித்­ தீ­வில் நேற்று சந்­தித்துப் பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான வேற்­று­மை­களை முறை­யா­கக் கையாண்டு, பூச­லைத் தவிர்க்க உறு­தி­பூண்டனர்.

உக்­ரேன் போர் உட்­பட இனி எந்­தக் காலத்­தி­லும் அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று அவர்­கள் திட்­ட­வட்­ட­மாகக் கூறினர்.

ஒருபோதும் அணுவாயுதப் போர் இடம்பெறக்கூடாது என்றும் அப்படிப்பட்ட போரில் என்றுமே வெற்றி இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உக்­ரேன்­மீது அணு­வா­யு­தத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தையோ பயன்­ப­டுத்­தப்போவ­தாக அச்­சுறுத்­து­வ­தையோ இரு­த­ரப்­பும் எதிர்ப்­ப­தா­க­வும் அதன் தொடர்­பில் தங்­க­ளின் இணக்­கத்தை வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.

தைவான் மீதான சீனாவின் மிகக் கடுமையான செயல்பாடுகள் அமைதியைச் சீர்குலைக்கும் அபாயத்தைத் தருவதாக திரு பைடன், ஸியிடம் தெரிவித்தார்.

ஆனால் சீனா-அமெ­ரிக்கா உற­வு­க­ளின் அர­சி­யல் அடித்­தளத்­தில் தைவான் முக்­கிய அங்­கம் வகிக்­கிறது என்­றும் சீனா­விற்கு தைவான் மிக முக்­கி­யம் என்­பதால் அந்தச் 'சிவப்­புக் கோட்டை' தாண்­டா­மல் இருப்­பதே இரு­நாட்டு உறவின் முதல் கட்­டம் என்­றும் அதி­பர் ஸி வலியுறுத்தினார்.

உல­கின் இரு­பெ­ரும் பொரு­ளி­யல்­க­ளாக விளங்­கும் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் அண்­மைக் கால­மாக தைவான் விவ­கா­ரம், உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு, வணி­கப் போட்டி எனப் பல அம்­சங்­களில் இணக்­கப் போக்­கு­டன் இல்லை என்­ப­தால் அந்­நா­டு­க­ளுக்கு இடை­யி­லான உற­வில் சரிவு ஏற்­பட்­டது.

"சீனா­வும் அமெ­ரிக்­கா­வும் உறவை சரி­வ­ரப் பேணும் என்று உல­கம் எதிர்­பார்க்­கிறது," என்று சீன அதி­பர் ஸி கூறி­னார். "போட்­டித்­தன்மை சண்­டை­யாக முற்­றி­வி­டு­வ­தைத் தவிர்க்­க­வும் வேற்­று­மையை முறை­யா­கக் கையா­ள­வும் விரும்­பு­கி­றேன்," என்­றார் அமெ­ரிக்க அதி­பர் பைடன்.

கடந்த ஆண்டு அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்ற பின்­னர் திரு பைடன் சீன அதி­ப­ரைச் சந்­திப்­பது இதுவே முதன்­முறை.

இரு­நாட்­டுக் கொடி­க­ளுக்கு முன்­பாக கைகு­லுக்­கிய பின்­னர் உல­கமே காத்­தி­ருந்த பேச்­சு­வார்த்­தையை இரு­த­ரப்­பி­ன­ரும் தொடங்­கி­னர்.

அதி­பர் ஸியும் சீனப் பேரா­ளர்­களும் தங்­கி­யுள்ள பாலி­யின் நுசா டுவா பகு­தி­யி­லுள்ள சொகு­சு­விடுதி­யில் சந்­திப்பு நடை­பெற்­றது.

உல­கம் முக்­கியமான கால கட்­டத்­தில் இருப்­ப­தா­க குறிப்பிட்ட அதி­பர் ஸி, இனி இரு­நாட்டு உற­விற்கும் சரி­யான திசை­யைக் கண்­டு­பிடிக்­க­வேண்­டும் என்­றும் உறவை மேம்­ப­டுத்­த­வேண்­டும் என்­றும் சொன்னார்.

இரு நாடு­களும் வெவ்­வேறு வர­லாறு, கலா­சா­ரம், சமூக அமைப்­பு­கள், வளர்ச்­சிப் பாதை­க­ளைக் கொண்­டி­ருந்­தா­லும், அவை இரு­தரப்பு உற­வு­க­ளுக்­குத் தடை­யாக விளங்­கக்­கூ­டாது என்­றார் அவர். மீண்­டும் சரி­யான தடத்­திற்கு உறவைக் கொண்­டு­வர அதி­பர் பைட­னு­டன் இணைந்து பணி­புரி­வதற்­குத் தாம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

பாலித்­தீ­வில் நேற்று மாலை 5.30 மணி­ய­ள­வில் தொடங்­கிய சந்­திப்பு கிட்­டத்­தட்ட மூன்று மணி நேரம் நீடித்­தது.

தாம் துணை அதி­ப­ரா­கப் இருந்தபோது அதி­பர் ஸியி­டம் கிட்­டத்­தட்ட 67 மணி நேரம் நேர­டிச் சந்­திப்­பில் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கணித்­துள்ள திரு பைடன், அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பதவி ஏற்­ற­பின் ஐந்து முறை மெய்­நி­கர் வழி­யில் திரு ஸியி­டம் பேசி­யுள்­ளார்.

நேரில் சந்­தித்­துப் பேசு­வ­தற்கு ஈடு­இணை இல்லை என இரு நாட்டு அதி­பர்­களும் தெரி­வித்­தனர்.

பூச்­செண்­டு­கள் நடுவே அலங்­க­ரிக்க, இரு நீள­மான மேசை­களில் நேருக்கு நேர் முகம் பார்த்து இரு­பெ­ரும் தலை­வர்­களும் பேசி­னர்.

இரு­பு­ற­மும் முகக்­க­வ­சங்­கள் அணிந்து அதி­கா­ரி­கள் அமர்ந்­தி­ருந்­த­னர். ஆனால் அதி­பர்­கள் இரு­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

கொவிட்-19 பர­வ­லுக்­குப்­பின் அதி­பர் ஸி மேற்­கொண்டுள்ள இரண்டாவது வெளி­நாட்­டுப் பய­ணம் இதுதான்.