95 வயது மூதாட்டியைக் கொலை செய்த பணிப்பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

95 வயது மூதாட்டியைக் கொலை செய்த பணிப்பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2 mins read

தமது 95 வயது முத­லா­ளி­யைக் கத்­தி­யால் குத்­திக் கொலை­செய்த மியன்­மார் நாட்டுப் பணிப்­பெண்­ணுக்கு 16 ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி காலை­யில், திரு­வாட்டி ஆங் பெக் சாய் என்ற அந்த மூதாட்டி தன் முகத்­தில் உமிழ்ந்­த­தாக சந்­தார் ஹிட்டூ என்ற அந்­தப் பணிப்­பெண் கூறி­னார்.

அத­னால் கோப­முற்ற சந்­தார், அம்­மூ­தாட்­டிக்­குப் பாடம் கற்­பிக்க நினைத்து அன்று நண்­ப­கல் நேரத்தில் அவ­ரது முகத்­தி­லும் கழுத்­தி­லும் கத்­தி­யால் குத்­தி­னார்.

ரெக்­ரி­யே­ஷன் சாலை­யி­லுள்ள திரு­வாட்டி ஆங்­கின் தரை­வீட்­டில் இந்­தக் கொலை நிகழ்ந்­தது.

சந்­தார் 36 வய­தா­ன­வர் என்று அவ­ரது அடை­யாள ஆவ­ணங்­கள் குறிப்­பி­டு­கின்­றன. ஆனால், உண்மை­யில் அவ­ருக்கு 51 வயது என்­றும் வேலை கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக பணிப்­பெண் முக­வை­யி­டம் பொய்­யான தக­வ­லைக் கூறி­னார் என்­றும் அவ­ரது சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் டேனியல் கோ தெரி­வித்­தார்.

கடந்த 2019 டிசம்­ப­ரில் சிங்­கப்பூர் வந்த சந்­தார் முத­லில் வேறு ஒரு வீட்­டில் வேலை­செய்­தார். பின்­னர் 2020 பிப்­ர­வ­ரி­யில் அவர் திரு­வாட்டி ஆங்­கின் வீட்­டிற்கு மாறி­னார்.

திரு­வாட்டி ஆங்­கைப் பார்த்­துக்­கொண்­ட­தோடு மற்ற வீட்டு வேலை­ க­ளை­யும் அவர் செய்­து­வந்­தார்.

சம்­பவ நாளன்று காலை 8 மணி­ அள­வில், சந்­தா­ரைத் திட்­டிய திரு­வாட்டி ஆங், அவ­ரது முகத்­தி­லும் உமிழ்ந்­தார்.

தமது மேல்­சட்­டை­யால் அதைத் துடைத்த சந்­தார், வேறு எது­வும் செய்­யா­மல் அமை­தி­காத்­தார்.

சில மணி நேரம் கடந்த பின்னரும் அச்­சம்­ப­வம் அவ­ரது மனத்தை உறுத்­திக்­கொண்டே இருந்­தது. பிற்­ப­க­லில் திரு­வாட்டி ஆங் உறங்­கச் சென்­று­விட்­டார். அவ­ரு­டைய 78 வயது மக­னும் வெளி­யில் சென்­றி­ருந்­தார்.

அப்­போது, சமை­ய­ல­றை­யில் இருந்து இரண்டு கத்­தி­களை எடுத்­துக்­கொண்டு திரு­வாட்டி ஆங்­கின் படுக்­கை­ய­றைக்­குள் புகுந்­தார் சந்தார். ஒரு கத்­தியை அவ­ரது வாயில் செரு­கிய சந்­தார், இன்­னொன்­றைக் கொண்டு அவ­ரின் இடப்­பக்க கழுத்­தில் குத்­தி­னார்.

அடுத்­த­டுத்த வீடு­க­ளில்­தான் திரு­வாட்டி ஆங்­கின் மற்ற பிள்ளை­கள் வசித்து வந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அவர்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக வேலி ஏறி குதித்து வெளியே வந்­தார் சந்­தார்.

பின்­னர் அவ்­வ­ழியே சென்ற ஒரு­வரி­டம் தம்­மைக் காவல்­து­றை­யி­டம் அழைத்­துச் செல்­லும்­படி சந்­தார் கேட்டார். அந்த வழிப்­போக்­கர் ஒரு கிராப் காரை வாட­கைக்கு அமர்த்தி, சந்­தா­ரு­டன் காவல்­நி­லை­யத்­திற்­குச் சென்­றார்.

காவல் நிலை­யத்­தில் தன் முதலா­ளி­யைக் கொன்­று­விட்­ட­தாக சந்­தார் கூறி­னார். அத­னைத் தொடர்ந்து காவல்­து­றை­யி­னர் திருவாட்டி ஆங்­கின் வீட்­டிற்­குச் சென்று பார்த்­த­போது அவர் சுய நி­னை­வின்­றிக் கிடந்­தார். சம்­பவ இடத்­தி­லேயே அவ­ரது உயிர் பிரிந்து­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சந்­தார்­மீது முத­லில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. அவருக்கு மன­ந­லம் சார்ந்த பிரச்­சினை இருப்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து, பின்­னர் அது குறைக்­கப்­பட்­டது.