மின்னிலக்கம், எரிசக்தி மேம்பாடு: இந்தியா, சிங்கப்பூர் கலந்துரையாடல்

மின்னிலக்கம், எரிசக்தி மேம்பாடு: இந்தியா, சிங்கப்பூர் கலந்துரையாடல்

1 mins read

மாநாட்­டின் முடி­வில் உறுப்­பி­னர்­கள் ஒன்­று­சேர்ந்து வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்­புக்கு வலு­வான எதிர்ப்பு இடம்­பெற்று இருந்­தது. நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு வரை ஒன்­று­கூடி, பேசி, கார­சா­ர­மான விவா­தங்­க­ளுக்­குப் பின்­னர் கூட்­ட­றிக்­கையை தயா­ரித்­துள்­ள­னர். இது இந்­தோ­னீ­சிய தலை­மைத்­து­வத்­துக்குக் கிடைத்த வெற்றி என்று இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ கூறி­னார். தொடக்­கத்­தில் பலர் கூட்­ட­றிக்கை வெளி­வ­ருமா என்ற சந்­தே­கத்தை எழுப்­பி­யதை அவர் குறிப்­பிட்­டார். போலந்­தில் புதிய ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­கள் நடந்­த­தன் எதி­ரொ­லி­யாக அந்­தக் கூட்­ட­றிக்கை வெளி­வந்­துள்­ளது.

அடுத்த ஆண்டு ஜி20 தலை­மைத்­து­வத்தை இந்­தியா ஏற்­றுள்­ளது. நட்பு நாடாக சிங்­கப்­பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்காக இந்­தி­யப் பிர­த­மர் மோடி­க்கு நன்றி தெரி­வித்­தார் பிர­த­மர் லீ. இரு நாடுகளுக்கும் இடையில் மின்னி லக்கமயம், எரிசக்திப் பாது காப்பு உள்ளிட்ட புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர்.