உக்ரேன் எல்லை அருகே போலந்து கிராமத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக கீவ் நகர் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்தத் தகவல் உறுதியானதா என்பது குறித்து அமெரிக்காவும் மேற்கத்திய நட்பு நாடுகளும் விசாரணை நடத்தி வருகின்றன. ஏவு
கணையை ரஷ்யா ஏவியிருப்பதுபோலத் தெரியவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
அவரது கூற்றையொட்டி நேற்று மாலை போலந்தும் நேட்டோவும் கருத்துத் தெரிவித்தன. இது ரஷ் யாவின் தாக்குதல் அல்ல என்றும் உக்ரேன் வீசிய ஏவுகணை திசை மாறி போலந்துக்குள் சென்றிருக் கலாம் என்றும் அவை கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற திரு பைடன், போலந்து மீது தாக்கு தல் நடத்தப்பட்ட தகவல் தொடர்பாக நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் உரையாற்றினார். போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக வெளியாகி இருக்கும் ஆரம்பக்கட்ட தகவலை மட்டும் வைத்து எதனையும் உறுதி செய்வதற்கில்லை என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கி ஒன்பது மாதங்கள் ஆகும் நிலையில் கீவ் நகரில் கடுமையான ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அப்போது போலந்து கிராமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது.
உக்ரேன்-போலந்து எல்லையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு உக்ரேன் நகரான லெவிவ் மீதும் ரஷ்ய ஏவு
கணைகள் தாக்கியதாக செய்திகள் வெளியாயின. அப்போது எல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிழக்கு போலந்து கிராமமான ஸெவோடோவில் தானியம் உலர்த்தும் பகுதியில் வெடிப்பு நிகழ்ந்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. நேட்டோ மேற்கத்திய ராணுவக் கூட்டமைப்பில் போலந்து அங்கம் வகிக்கிறது.
எனவே போலந்தைத் தற்காக்கும் பொறுப்பு நேட்டோவுக்கு உண்டு. வெடிப்பு தொடர்பான விசாரணையில் போலந்துடன் இணைந்து செயல்படுவதாக நேட்டோ தெரிவித்தது. நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஜெர்மனி, கனடா போன்றவை தெரிவித்தன.

