ஊர்திரும்பும் 2 மில்லியன் மலேசியர்கள்; நெரிசல் நிகழலாம்

ஊர்திரும்பும் 2 மில்லியன் மலேசியர்கள்; நெரிசல் நிகழலாம்

1 mins read

நாளை மறு­தி­னம் நடக்க இருக்­கும் 15வது மலே­சிய பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளிக்க உள்­நாட்­டில் சுமார் 2 மில்­லி­யன் பேர் தங்­க­ளது சொந்த ஊருக்­குத் திரும்ப இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அதன் கார­ண­மாக மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பேருந்து, ரயில் சேவை­க­ளின் நுழை­வுச் சீட்டு விற்­பனை பல­ம­டங்கு அதி­க­ரித்­து­விட்­டது.

நாட்­டின் வடக்கு-தெற்கு நெடுஞ்­சா­லை­யில் இன்று முதல் போக்­கு­ வ­ரத்து நெரி­சல் அதி­க­மாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதன் கார­ண­மாக பய­ணத்­தில் தாம­தம் நிக­ழ­லாம் என்­றும் கூறப்­

ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­கள் பல­ரும் தங்­க­ளது சொந்த ஊருக்­குச் செல்ல இருக்­கின்­ற­னர்.

இவர்­கள் ஒரு­பு­ற­மி­ருக்க, அஞ்­சல் மூலம் வாக்­க­ளிக்­க­வும் ஏரா­ள­மா­னோர் பதிவு செய்­துள்­ள­னர்.

சிங்கப்பூரில் 4,000 வாக்காளர்கள்

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 4,000 மலே­சி­யர்­கள் அவ்­வாறு பதிவு செய்­துள்­ள­னர். இங்கு பதி­வா­கும் வாக்­கு­களை மலே­சி­யா­வுக்­குப் பத்­தி­ர­மாக அனுப்பி வைக்க மலே­சி­யர்­கள் சிலர் தொண்­டூ­ழி­யம் புரி­கின்­ற­னர். அவர்­களில் ஒரு­வ­ரான ஃபாரா டியானா முகம்­மது அலி, 34, என்­னும் வர்த்­தக மேம்­பாட்டு நிர்­வாகி மலே­சி­யர்­க­ளின் வாக்­கு­களை அனுப்பி வைப்­ப­தில் இரண்­டாவது முறை சேவை­யாற்ற இருக்­கி­றார்.

இதற்கு முன்­னர் ஜோகூர் மாநி­லத் தேர்­த­லின்போது வாக்­குப் பெட்­டி­களைப் பத்­தி­ரமா­கக் கொண்டு சேர்க்க தொண்டூழியம் புரிந்து உத­வி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் அவர் கூறினார்.