நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் பொறுப்பை தாம் ஏற்றால் தமது அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் தாம் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டால் தமது அமைச் சர்களின் சொத்து விவரங் களை வெளியிட உத்தரவிடப்போவதாக மலேசியாவின் பிரதான எதிர்த்தரப்புத் தலைவரான அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். "சொத்து விவரங்களை வெளியிட மறுப்போர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இது எனது வாக்குறுதி," என்று அவர் தமது பிரசாரத்தின்போது கூறினார். வாக்களிக்கச் செல்லும்போது வேட்பாளர்களின் வசதி வாய்ப்புகளையும் அவர்களின் பின்னணியையும் ஆராய்வது வாக்காளர்களுக்கு முக்கியம் என்றார் அவர்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். ஆனால், சில வேட்பாளர்களின் பணபல பின்னணி குறித்து யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்றார் திரு அன்வார்.

