தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல சவால்களுக்கு இடையே வாக்களித்த மலேசியர்கள்

2 mins read
b1f780b8-80a8-464c-b2b1-3ad7e9118300
முழங்கால் அளவு வெள்ளத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். படம்: மலேசியத் தீயணைப்புப் படை -

பல சவால்­க­ளை­யும் கடந்து மில்­லி­யன்­க­ணக்­கான மலே­சி­யர்­கள் நேற்று பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளித்­த­னர்.

வெள்ளம்

மலே­சி­யா­வில் தற்­போது பரு­வ­

ம­ழைக்­கா­லம் என்­ப­தால் சில இடங்­களில் கன­மழை பெய்து வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் தங்­கள் ஜன­நா­யகக் கடமையை

எப்­படி­யும் நிறை­வேற்ற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் இருந்­த சிலர் வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளித்­த­னர். கிளந்­தான் மாநி­லத்­தின் ரந்­தாவ் பாஞ்­சாங் தொகு­தி­யில் நெஞ்சு அள­வி­லான வெள்­ளத்­தைக் கண்டு அஞ்­சா­மல் ஐந்து பேர் கொண்ட குடும்­பம் பட­கில் சென்று வாக்­க­ளித்­த­னர். அவர்­களில் முதல்­மு­றை­யாக வாக்­க­ளித்த 18 வயது பெண்­ணும் அவ­ரது 70 வயது பாட்­டி­யும் அடங்­கு­வர். பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட அப்­பெண்­ணின் தந்­தை­யும் அவர்­க­ளு­டன் சென்று வாக்­க­ளித்­தார்.

நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருப்பு

இது ஒரு­பு­றம் இருக்க, வாக்­க­ளிப்பு மையங்­களில் பல மணி நேரம், நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்து பலர் வாக்­க­ளித்­த­னர். ஆனால் சில வாக்­க­ளிப்பு மையங்­களில் வாக்­க­ளிக்­கா­ம­லேயே சிலர் ஏமாற்­றத்­து­டன் வீடு திரும்­பி­னர்.

தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள லெம்பா பந்­தா­யில் பல மணி நேரம் காத்­தி­ருந்­தும் வாக்­க­ளிப்­புப் பெட்­டி­களை நெருங்க முடி­யா­மல்­போ­ன­தாக அத்­தொ­குதி மக்­கள் சிலர் அதி­ருப்்தி தெரி­வித்­த­னர். அவர்­க­ளுக்­கும் தேர்­தல் ஆணைய அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­ட­தாக மலே­சிய ஊட­கம் தெரி­வித்­தது. இறு­தி­யில் வாக்­க­ளிக்­கும் எண்­ணத்தை அவர்­களில் சிலர் கைவிட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. நெகிரி செம்­பி­லா­னில் உள்ள கோலா பிலா தொகு­தி­யில் இருந்த வாக்­க­ளிப்பு மையம் ஒன்­றுக்­கும் வாக்­கா­ளர்­கள் நேற்று பிற்­ப­கல் சென்­ற­போது அதிர்ச்சி அடைந்­த­னர். அந்த வாக்­க­ளிப்பு மையம் மூடப்­பட்­டி­ருந்­தது. விசா­ரித்­துப் பார்த்­த­தில் அந்த மையம் பிற்­ப­கல் 2 மணிக்கு மூடப்­பட்­ட­தாக தெரி­ய­வந்­தது. இத­னால் அவர்­கள் சினம் அடைந்­த­னர். ஆனால் இதில் தேர்­தல் ஆணை­யத்­தின் தவறு ஏதும் இல்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சில வாக்­க­ளிப்பு மையங்­கள் பிற்­ப­கல் 2 மணி அல்­லது 4 மணிக்கு மூடப்­படும் என்­றும் அதற்கு முன்­ன­தா­கவே அங்கு சென்று வாக்­க­ளிக்­கு­மா­றும் வாக்­கா­ளர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே தெரி­வித்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். எனவே, வாக்­க­ளிக்க முடி­யா­மல் போன­தற்கு வாக்­கா­ளர்­க­ளின் கவ­னக்­கு­றைவே கார­ணம் என்று அவர்­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே, ஜோகூர் மாநி­லத்­தில் உள்ள இரண்டு வெவ்­வேறு வாக்­க­ளிப்பு மையங்­களில் பெண்­கள் இரு­வர் மாண்­ட­னர். 57 வயது பெண் ஒரு­வர் வாக்­க­ளித்து ­விட்டு வெளியே வந்­த­போது மயங்கி கீழே விழுந்து மாண்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

85 வயது மூதாட்டி ஒருவர், வாக்­க­ளிக்க வரி­சை­யில் காத்­துக்­கொண்­டி­ருந்­த­போது மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார்.

வாக்­க­ளிக்க நோய் தடை­யல்ல

திரங்­கா­னு­வின் முன்­னாள் முதல்­வ­ரு­டைய மனைவி நோய்­வாய்ப்­பட்­டி­ருந்­தும் ஆம்­பு­லன்­ஸில் இருந்­த­வாறு வாக்­க­ளித்­தார். இதே­போன்று படுத்த படுக்­கை­யாக இருக்­கும் ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர் ஒரு­வ­ரும் வாக்­க­ளித்­தார்.