மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் அந்நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் குடும்பம் குடும்பமாய் வாக்களித்தனர்.
18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட பல இந்திய இளையர்கள் நேற்று முதல்முறையாக, மிகுந்த ஆவலுடன் வாக்களித்தனர்.
கோலாலம்பூரின் பத்து தொகுதி யில் உடன்பிறப்புகளான ஷாலினி தேவி கிருஷ்ணன், கணேஷ் குமார், திவ்யக்கரசி, சுந்தர தர்ஷினி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
போட்டியிடும் வேட்பாளர்களில் நாட்டை வழிநடத்தும் ஆற்றலும் தகுதியும் யாருக்கு இருக்கிறது என்பதை நன்கு ஆராய்ந்து, கலந்துரையாடிய பிறகே வாக்களிப்பு மையத்துக்குச் சென்று வாக்களித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

