முகைதீன்: ஆதரவு எனக்குத்தான் அன்வார்: எனக்கே அழைப்பு வரும்

முகைதீன்: ஆதரவு எனக்குத்தான் அன்வார்: எனக்கே அழைப்பு வரும்

3 mins read
3bb42463-1417-4f06-9e5c-2d5169704021
மலேசியாவின் முன்னாள் பிரதமரும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் (இடமிருந்து 2வது) நேற்று ஷா அலாம் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதர தலைவர்களுடன் சேர்ந்து வெற்றி முழக்க ஒலி எழுப்பினார். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியத் தேர்தலில் நீயா-நானா: இன்று பிற்பகல் 2 மணிக்குள் பிரதமரை அறிவிக்க மாமன்னர் கெடு

மலே­சி­யா­வில் நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில் யாருக்­கும் பெரும்­பான்மை இல்­லாத நிலை­யில், முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின், தனக்­குப் போதிய ஆத­ரவு இருப்­ப­தாக நேற்று அறி­வித்­தார்.

நாட்­டின் 10வது பிர­த­ம­ராக பதவி ஏற்க தான் ஆயத்­த­மா­கி­விட்­ட­தா­க­வும் அவர் தெரிவித்தார்.

அதே­வே­ளை­யில், அடுத்த அர­சாங்­கத்தை அமைக்க பெரும்­பான்மை ஆதரவு இன்­ன­மும் தனக்கே இருப்­ப­தாக பக்­கத்­தான் ஹரப்­பான் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் கோலா­லம்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­களி­டம் நேற்று உறுதிபட கூறி­னார்.

இதன் தொடர்­பி­லான சட்­டப்­பூர்வ பிர­க­ட­னம் மாமன்­ன­ரி­டம் தாக்­கல் செய்­யப்­பட்டு இருப்­ப­தா­க­வும் தமக்கு அடுத்த பிர­த­மர் வாய்ப்பு வழக்­கப்­படும் என்று உறு­தி­யாக தான் நம்பி இருப்­ப­தா­க­வும் அன்­வார் தெரி­வித்­தார்.

முன்னதாக, சாபா, சர­வாக் மாநி­லங்­களில் பெரும்­பா­லான தொகு­தி­களில் வெற்றி பெற்று இருக்­கும் முக்­கி­ய­மான இரண்டு போர்னியோ கூட்­ட­ணி­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக நேற்று திரு முகைதீன் அறி­வித்­தார்.

ஜிபி­எஸ், ஜிஆர்­எஸ் என்ற அந்த இரண்டு கூட்­ட­ணி­க­ளுக்­கும் மொத்­தம் 28 இடங்­கள் கிடைத்து இருக்­கின்­றன.

முகை­தீ­னின் பெரிக்­காத்­தான் நேஷனல் (பிஎன்) கூட்­டணி 73 இடங்­க­ளைப் பிடித்து இருக்­கிறது.

ஜிபி­எஸ், ஜிஆர்­எஸ் தலை­வர்­கள் நேற்று முகை­தீ­னைச் சந்­தித்­துப் பேசி­னார்­கள். தம்மை பிர­த­ம­ராக பெயர் குறிப்­பிட ஜிபி­எஸ், ஜிஆர்­எஸ் கூட்­ட­ணி­கள் இணங்கி இருப்­ப­தாக நேற்று மாலை அறிக்கை ஒன்­றில் முகைதீன் கூறினார்.

புதிய அர­சில் பாரி­சான் நேஷனல் சம்­பந்­தப்­பட்டு இருக்­குமா என்பது தெரி­ய­வில்லை. பிஎன் கூட்டணிக்கு பாரி­சான் நேஷனல் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த குறைந்­த­பட்­சம் 11 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைப் பெற­வேண்டி இருக்­கிறது.

அப்­படிப் பெற்­றால்­தான் 222 பேரைக் கொண்ட நாடா­ளு­மன்­றத்­தில் பிஎன் அணிக்குப் பெரும்­பான்மை கிடைக்­கும்.

முன்­ன­தாக பிஎன் கூட்­டணி அர­சில் அங்­கம் வகிக்க தான் ஒப்­புக்­கொண்டு இருப்­ப­தாகவும் அந்­தப் புதிய அணி­யில் பாரி­சான் நேஷ­ன­லும் சேர்ந்து இருக்­கும் என்றும் ஜிபி­எஸ் அணித் தலை­வர் அபாங் ஜொஹாரி சர­வாக்­கில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்து இருந்­தார்.

ஆனால் பிஎன் கூட்­ட­ணி­யோடு சேர்ந்து மத்­திய அரசை அமைப்­ப­தன் தொடர்­பில் ஜிபிஎஸ் அணி­யு­டன் பாரி­சான் நேஷ­னல் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை என்று அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துவிட்டார்.

மலே­சி­யா­வில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்­த­லில் தேசிய முன்­னணி (பாரிசான் நேஷ­னல்), பக்­கத்­தான் ஹரப்­பான் (பிஎச்), பெரிக்­காத்­தான் நேஷ­னல் (பிஎன்) ஆகிய மூன்று முக்கிய கூட்­டணி­கள் களம் கண்­டன.

அன்­வார் தலை­மை­யி­லான பிஎச் அணிக்கு மொத்­தம் 82 இடங்­கள் கிடைத்­தன. முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின் தலை­மை­யி­லான பிஎன் அணி­க்கு ஆதரவாக 79 இடங்­கள் கிடைத்தன.

யாருக்­கும் பெரும்­பான்மை கிடைக்­காத நிலையில் அன்­வார்-முகை­தீன் இரு­வ­ரும் பிர­தமர் பத­விக்­குக் குறிவைத்து காய்­களை நகர்த்­தத் தொடங்­கி­னர்.

சரவாக் மாநி­லத்­தில் உள்ள 31 இடங்­களில் 22 இடங்­க­ளைப் பிடித்­துள்ள ஜிபிஎஸ் என்ற கட்­சி­யின் தலை­வ­ரும் அந்த மாநில முதல்­வ­ரு­மான அபாங் ெஜாஹாரி, நேற்று கோலா­லம்­பூர் விரைந்து முகை­தீ­னைச் சந்­தித்­தார்.

அதோடு, நாடா­ளு­மன்­றத்­தில் ஆகப் பெரிய தனிக் கட்­சி­யா­கத் திக­ழும் பாஸ் கட்சித் தலை­வர் ஹாடி அவாங்­கை­யும் அவர் சந்­தித்­தார்.

அன்­வார், ஜிபி­எஸ் கட்­சி­யு­டன் பேச்சு நடத்த நேற்று காலை நேரத்­தி­லேயே முயற்­சி­களை முடுக்கிவிட்­டார்.

ஆனால் அவரை விடுத்து திரு முகை­தீ­னைச் சந்­திக்க ஜிபி­எஸ் தலை­வர் எடுத்த முடிவு அன்­வா­ருக்­குப் பெரும் பின்­ன­டை­வாகி விட்­ட­தாக தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் கூறின.

இவ்­வே­ளை­யில், கூடி­ய­வி­ரை­வில் பெரும்­பான்மை அரசை அமைக்­கும்­படி வலி­யு­றுத்தி அனைத்து அர­சி­யல் கட்சி­களுக்­கும் அரண்­மனை கடி­தங்­களை எழுதி இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தது.

"எல்லா கட்­சி­களும் அரசு அமைப்­பதற்­கான தங்­கள் அணி­களை அறி­விக்க வேண்­டும்.

"நாடாளுமன்­றத்­தில் பெரும்­பான்­மையை மெய்ப்­பிக்­கக்­கூ­டிய உறுப்­பி­னரின் பெயரை திங்­கட்கி­ழமை (இன்று) பிற்­பகல் 2 மணிக்­குள் தெரி­யப்­ப­டுத்­தி­விட வேண்­டும் என்று மாமன்­னர் உத்­த­ர­விட்டு இருக்கிறார்," என நேற்றுப் பிற்­பகலில் அரண்­மனை தெரி­வித்­தது.