அம்னோ தலைவர் பதவி விலக நெருக்குதல்

அம்னோ தலைவர் பதவி விலக நெருக்குதல்

1 mins read

மலே­சிய பொதுத் தேர்­த­லில் வர­லாறு காணா தோல்வி கண்­டதை அடுத்து அம்னோ தலை­வர் பத­வி­யில் இருந்து

ஸாஹிட் ஹமிடி உட­ன­டி­யாக விலக வேண்­டும் என்ற கோரிக்­கை­கள் வலுத்து வருகின்றன.

ஜோகூர் முதல்­வ­ரும் அம்னோ கட்­சி­யின் உச்ச மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஓன் ஹாஃபிஸ் கனி, ஃபேஸ்புக்­கில் இது பற்றி தெரி­வித்­த­போது, 2018 தேர்­த­லில் அம்னோ தலை­மை­யி­லான பாரி­சான் நேஷ­னல் தோல்வி கண்­டதை அடுத்து அம்னோ தலை­வர் பத­வி­யில் இருந்து நஜிப் ரசாக் வில­கி­ய­தைச் சுட்­டிக்­காட்டி, அதே­போல ஸாஹிட்டும் செய்ய வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.

மலாய் அர­சி­யல் சுனா­மி­யில் அம்னோ அடித்­துச் செல்­லப்­பட்­டு­விட்­டது என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

அம்னோ தக­வல் துறை தலை­வரான ஷாரில் ஹம்­டான், நேற்று பதவி வில­கி­னார். அதே­போல, ஸாஹிட்­டும் விலக வேண்­டும் என்று அவர் குரல்­கொ­டுத்­தார்.

அதே­போல, மலே­சிய சீனர் சங்கமும் குரல்­கொ­டுத்து இருக்­கிறது. ஸாஹிட் தலை­மைத்­து­வத்­தில் நம்­பிக்கை போய்­விட்­ட­தாக அந்­தச் சங்­கம் அறிக்கையில் குறிப்­பிட்டுள்ளது.

மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் பாரி­சான் நேஷ­னல் வெறும் 30 இடங்­களை மட்­டுமே வென்று இருக்­கிறது என்பது குறிப்பிடத்தக்கது.