மலேசியா: அரசாங்கத்தை அமைக்க மும்முரமான சதுரங்க ஆட்டம்

3 mins read
4085df34-d246-4b99-b376-60ae33e45a82
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் (இடம்), பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்டஸ் -
multi-img1 of 2

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் அடுத்த அர­சாங்­கத்தை அமைக்­கத் தேவை­யான பெரும்­பான்மை இடங்­கள் தங்­கள் கூட்­ட­ணிக்கே உள்­ளது என்று பக்­கத்­தான் ஹரப்­பா­னும் பெரிக்­கத்­தா­னும் நேற்று மாறி மாறிக் கூறிய நிலை­யில் அர­சி­யல் இழு­ப­றிக்கு முடிவு எது­வும் நேற்று காணப்­ப­ட­வில்லை.

கூட்டணிக்கட்சிகளின் ஆதரவை நிரூபிப்பதற்கான காலக்கெடுவை மலே­சிய மாமன்­னர் இன்று பிற்­ப­கல் 2 மணி வரை நீட்­டித்­துள்ளார்.

மலேசியாவின் 10வது பிர­த­ம­ராக திரு முகை­தீன் யாசினை தேர்வு செய்ய 112 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து ஆத­ர­வுக் கடி­தங்­க­ளாக பிர­மாண பத்­தி­ரங்­களை மாமன்­ன­ருக்கு தான் அனுப்பி வைத்­துள்­ள­தாக பெரிக்­கத்­தான் நேஷ­னல் முன்னதாகக் கூறி­யது.

நேற்று பிற்­ப­கல் 2 மணி காலக்­கெ­டு­விற்கு முன்­ன­தா­கவே ஆத­ர­வுக் கடி­தங்­கள் அனுப்­பப்­பட்­ட­தாக பெரிக்­கத்­தான் குறிப்பிட்டது.

இருப்­பி­னும் தேசிய முன்­ன­ணியின் கோரிக்­கையை ஏற்று ஆதரவளிக்கும் கட்சி விவரங்களை தெரிவிக்க நேற்று பிற்­ப­கல் 2 மணிவரை விதிக்­கப்­பட்­டி­ருந்த காலக்­கெ­டுவை மாமன்­னர் 24 மணி­நே­ரத்­துக்கு நீட்­டித்­தார்.

பல­ரும் எதிர்­பார்க்­கா­த திருப்­ப­மாக பக்­கத்­தான் ஹரப்­பா­னுக்­கும் பாரி­சான் நேஷ­னல் எனப்­படும் தேசிய முன்­ன­ணிக்­கும் இடையே கூட்­ட­ணிப் பேச்சு வார்த்தை நேற்று முற்­ப­க­லில் கோலா­லம்­பூ­ரில் உள்ள செரி பசி­ஃபிக் ஹோட்­ட­லில் இடம்­பெற்­றது. டாக்­டர் அன்­வா­ருக்­கும் தேசிய முன்­னணி தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டிக்­கும் இடை­யி­லான அச்­சந்­திப்­பில் பஹாங், பேராக் மாநி­லச் சட்­ட­மன்­றங்­களில் கூட்­டணி அமைப்­ப­தன் தொடர்­பில் இணக்­கம் காணப்­பட்­டது.

ஆனால் பிர­த­மர் பத­விக்கு யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது பற்றி தமது கூட்­ட­ணி­யின் உச்­ச­மன்­றம் இன்­னும் முடி­வெ­டுக்­க­வில்லை என்­றார் திரு ஸாஹிட். அந்த உச்­ச­மன்­றம் இன்று முடி­வைத் தெரி­விக்­கும் என்று கூறப்­பட்­டது.

பெரிக்­கத்­தான் நேஷ­ன­லு­டன் சேர்ந்து ஆட்சி அமைப்­பது தொடர்­பில் தேசிய முன்­னணி எந்­த­வொரு முடி­வை­யும் எடுக்­க­வில்லை என்­றும் திரு ஸாஹிட் கூறி­னார்.

ஆனால் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பின்­னர் பேசிய டாக்­டர் அன்­வார், ஆட்­சி­ய­மைக்­கத் தேவை­யான 112க்கும் அதி­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் தம்­ பக்கம் உள்­ளனர் என்று வலி­யு­றுத்­தி­னார்.

பக்­கத்­தான் ஹரப்­பான் - தேசிய முன்­னணி கூட்­டணி மலர்ந்­தால் தாம்­தான் பிர­த­மர் வேட்­பா­ளர் என்­றார் அவர்.

இருப்­பி­னும் தேசிய முன்­ன­ணி­யைச் சேர்ந்த குறைந்­தது 18 நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் திரு முகை­தீன் பிர­த­மர் வேட்­பா­ளர்­ ஆவ­தற்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­ப­தாக பெரிக்­கத்­தான் நேஷ­ன­லில் அங்­கம் வகிக்­கும் பாஸ் கட்­சி­யின் தேர்­தல் இயக்­கு­நர் சனூசி நூர் கூறி­னார். ஜோகூர் உள்­ளிட்ட பல்­வேறு மாநில அம்னோ பிரி­வு­களும் அத்­த­கைய கூட்­ட­ணிக்கு எதி­ராக உள்­ளன.

கடந்த சனிக்­கி­ழமை 19ஆம் தேதி நடை­பெற்ற 15வது மலே­சி­யப் பொதுத் தேர்­தலில் எந்­தக் கூட்­ட­ணிக்­கும் பெரும்­பான்மை இடங்­கள் கிடைக்­காத நிலை­யில், தொங்கு நாடா­ளு­மன்­றம் உரு­வா­கி­யுள்­ளது.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்கு 82 இடங்­களும் பெரிக்­கத்­தான் நேஷ­னல் கூட்­டணிக்கு 73 இடங்­களும் கிடைத்­தன. பாரி­சான் நேஷ­னல் கூட்­டணி 30 இடங்­கள் பெற்று சரி­வைச் சந்­தித்­தது. 28 இடங்­கள் பெற்ற போர்­னியோ கட்­சி­க­ளான ஜிபி­எஸ், ஜிஆர்­எஸ் இரண்­டும் திரு முகை­தீ­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

- மேலும் மலேசிய செய்திகள் 6ஆம் பக்கத்தில்.