சுகாதார அமைச்சர் ஓங் யி காங்: தாதியர் அணி வலுப்படுத்தப்படும் அடுத்த ஆண்டிறுதியில் 4,000 புதிய தாதிகள்

சுகாதார அமைச்சர் ஓங் யி காங்: தாதியர் அணி வலுப்படுத்தப்படும் அடுத்த ஆண்டிறுதியில் 4,000 புதிய தாதிகள்

2 mins read

சிங்­கப்­பூ­ரின் தாதி­யர் அணியை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஒன்­றாக, அடுத்த ஆண்டு இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 4,000 புதிய தாதி­கள் வேலை­யில் சேர்க்­கப்­ ப­டு­வர் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார்.

இது சிங்­கப்­பூ­ரில் தற்­போ­துள்ள தாதி­கள் எண்­ணிக்­கை­யில் 10 விழுக்­கா­டா­கும் என்­றும் 2021ல் சுமார் 3,300 புதிய தாதி­கள் வேலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்­றும் திரு ஓங் கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின்­போது வெளி­நாட்டுத் தாதி­களை வேலை­யில் சேர்ப்­பது குறைந்­த­தால், அதற்கு ஈடு­கட்­டும் வகை­யில் அடுத்­தாண்டு சேர்க்­கப்­படும் புதிய தாதி­யரில் 60 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­ட­வ­ராக இருப்­பர்.

"நமது தாதி­யர் அணி­யைப் பெருக்க கூடு­த­லான வெளி­நாட்­ட­வரை வேலை­யில் சேர்த்­தா­லும், தாதி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் தொடர்ந்து உள்­ளூர்க்­கா­ரர்­க­ளாக இருப்­பார்­கள். தாதி­மைப் படிப்பின் வழி­யா­க­வும் பணி இடைக்­கா­லப் பயிற்­சித் திட்­டங்­க­ளின் வழி­யா­க­வும் அவர்­கள் தாதி­மைத் தொழி­லில் சேர்க்­கப்­ப­டு­வார்­கள்," என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிப்­ப­தன்­வழி தாதி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைக்­க­லாம் என்­றார் திரு ஓங். பெருந்­தொற்­றின்­போது தாதி­யருக்கு நில­விய போட்­டி­யால் பல தாதி­கள் மற்ற நாடு­க­ளுக்­குச் சென்­று­விட்­டதை அவர் சுட்­டி­னார். வேலை­யி­லி­ருந்து வில­கிய அர­சாங்க மருத்­துவ மனைத் தாதி­க­ளின் விகி­தம் 2021ஆம் ஆண்டு அதற்கு முந்திய ஐந்­தாண்டுகளில் இல்லாத உச்­சத்தை அடைந்­த­தாக மூத்த சுகா­தார நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரி­வித்­தார்.

தாதி­யரை வேலையில் தக்­க­வைத்­துக்­கொள்ள, அர­சாங்­கத் துறைத் தாதி­யருக்கு அடிப்­ப­டைச் சம்­ப­ளத்­தில் 1.7 முதல் 2.1 மாதங்­கள் வரை­யி­லான சிறப்­புத் தொகை வழங்­கப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஜூலை­யில் அறி­வித்­தி­ருந்­தார்.

மேலும், மருத்­து­வ­ம­னை­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை நில­வி­ய­போ­தும், மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­கள், அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் கவ­னிப்பு, அங்கு படுக்­கை­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்­கும் நேரம் ஆகி­ய­வற்­றில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­டுள்­ள­தாக திரு ஓங் கூறி­னார். எக்ஸ்­பிபி வகை கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் வந்­ததை அடுத்து நிலைமை மேம்­பட்­டது.

அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் உட­னடிக் கவ­னிப்பு தேவைப்­பட்ட நோயா­ளி­கள் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட் டனர். உட­னடிக் கவ­னிப்பு தேவைப் படா­தோர் காத்­தி­ருந்த நேரம் பாதி­யா­கக் குறைந்­தது.

அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் காத்­தி­ருக்­கும் நேரம் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர், ஏழு மணி நேரத்­தி­ லிருந்து நான்கு மணி நேர­மா­கக் குறைந்­தது.

மேலும், கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­களை ஒதுக்­கா­மல் இருப்­பது, மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து வெளி­யேறி நீண்­ட­கால சிகிச்­சைக்கு மாறு­வோ­ருக்கு வேறு இடைக்­கால வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வது போன்­ற­வற்­றின் வழி மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­கள் அதி­க­ரிக்­கப்­படும் என்றார் திரு ஓங்.