உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் எதிர்பாராத ஒன்று நேற்று நடந்தது.
காற்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான அர்ஜெண்டினாவை 2-1 எனும் கோல் கணக்கில் சவூதி அரேபியா தோற்கடித்தது.
யாரும் நினைத்துக்கூட பார்த்திராத இந்த முடிவு போட்டியில் களமிறங்கியுள்ள குழுக்களை மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் கோலாக்கினார். முற்பாதி முடிவதற்குள் பந்தை இருமுறை வலைக்குள் சேர்த்தது அர்ஜெண்டினா. ஆனால் ஆஃப்சைட் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டன.
பிற்பாதியில் சவூதி சக்கைபோடு போட்டது. 48வது நிமிடத்தில் அல் ஷெரியும் 53வது நிமிடத்தில் அல் டோசரியும் கோல் போட்டனர்.