மின்னிலக்கம், பசுமைத் திட்டம், பராமரிப்பு ஆகிய திற்னகளைக் கொண்ட ஊழியர்களுக்கான தேவை கடந்த நான்கு ஆண்டு
களாக அதிகரித்துள்ளதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பசுமைத் திட்ட நிர்வாகத் திறன்களுக்கான தேவை 23 மடங்கு அதிகரித்துள்ளது. நீடித்த நிலைத்தன்மை முதலீட்டு
நிர்வாகத் திறனுக்கான தேவை 15.5 மடங்கு அதிகரித்துள்ளது.
மென்பொருள் பரிசோதனை, பயனீட்டாளர் அனுபவ வடிவமைப்பு போன்ற திறன்களுக்கான தேவையும் அதே காலகட்டத்தில் ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
நிபுணத்துவ ஆலோசனை போன்ற பராமரிப்புத் திறன்களுக்கான தேவையும் ஏற்றம் கண்டுள்ளது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றன. இந்த அறிக்கையைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்விமான்கள், முதலாளிகள் விருதளிப்பு விழாவில் வெளியிட்டார்.
வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதை அறிக்கை காட்டுவதாக திரு சான் தெரிவித்தார். இதுபோன்ற அறிக்கையை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வெளியிடுவது இது இரண்டாவது முறை. நாட்டின் பொருளியலை மேம்படுத்த தேவையான திறன்களை அந்த அறிக்கை பட்டியலிடுகிறது.
இந்தத் திறன்களை அறிக்கை மின்னிலக்கம், பசுமைத் திட்டம், பராமரிப்புத் திறன் என மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் காலியான வேலைகள் குறித்து சிங்கப்பூரில் உள்ள முதலாளிகள் விளம்பரம் செய்திருந்ததை அடிப்படையாகக் கொண்டு தேவை அதிகம் உள்ள திறன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வகை திறனுக்கும் தேவை எந்த அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை விவரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, இத்திறன்
களைப் பயன்படுத்தும் வேலைகள் பற்றியும் இத்திறன்களை எங்கு கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடை மாற்ற ஊழியர்களுக்கென அறிக்கையில் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளியல் வளர்ந்து வரும் நிலையில் இத்தகைய ஊழியர்கள் தங்கள் திறன்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அவசரநிலை
யாகப் பருவநிலை மாற்றம் அடையாளம் காணப்படுவதால் பசுமைப் பொருளியல் திறன்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் திருவாட்டி மெலிசா லோ கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூரில் உள்ள பல துறைகளில் மின்னிலக்கமயமாதல் விரைவுபடுத்தப்பட்டதாக சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் தொடர்பு, தொழில்நுட்பப் பேராசிரியர் லிம் சன் சன் தெரிவித்தார்.கட்டுமானத்துறை, விவசாயத்துறை, வாழ்வியல்துறை ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக பெரும்பாலான அல்லது அனைத்துத் துறைகளிலும் மின்னிலக்கத் திறன்கள் அவசியமாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
மின்னிலக்கம், பசுமைத் திட்டம், பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றைப் பெற அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் புதுப்பிக்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிறப்புப் பயிற்சிகளில் சிங்கப்பூரர்கள் ஈடுபடலாம்.
"இந்தத் திறன்களுக்கான தேவை தற்போது அதிகமாக அதி
கரித்து வருகிறது. ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு இத்திறன்களுக்கான தேவை இவ்வளவு வேகமாக அதிகரிக்காது. எனினும், இத்தேவைகள் பல ஆண்டுகளாக இருந்து வரும்
சந்தைப்படுத்துதல் போன்ற |பணி
களில் நிலைத்திருக்கும். இதற்கு மக்களும் தொழில்துறைகளும் தயாராக இருக்க வேண்டும்," என்றார் பேராசிரியர் லிம்.

