தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் நேற்று நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஒருவர் மாண்டார், கிட்டத்தட்ட 30 பேர் காயம் அடைந்தனர். மாண்டவர் காவல்துறை அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை அதிகாரியாக ஒருவர் வேடமிட்டு கார் ஒன்றை வளாகத்திற்குள் ஓட்டிச் சென்று அதை அங்கு நிறுத்தி வைத்தார்.
அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரம் கழித்து கார் வெடித்துச் சிதறியது.
காவல்துறையினருக்கு எதிராக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதாகவும் காய
மடைந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

