மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்; 24 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் காலம் கனிந்தது அன்வார் இப்ராகிம் மலேசியப் பிரதமர்

மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்; 24 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் காலம் கனிந்தது அன்வார் இப்ராகிம் மலேசியப் பிரதமர்

3 mins read
6767b029-b205-4b7f-a67d-092b196571a7
அரசமாளிகையில் நேற்று புதிய பிரதமர் அன்வார் இப்ராகிம் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். படம்: பெர்னாமா -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 10வது பிர­த­ம­ராக பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் தலை­வர் திரு அன்­வார் இப்­ரா­கிம் பத­வி­யேற்­றுள்­ளார்.

அர­சி­ய­லில் அதி­வே­க­மான உயர்வு, எட்­டிப் பிடிக்­கும் தூரத்­தில் பிர­த­மர் பதவி, அதன் பிறகு கடும் வீழ்ச்சி, இரு முறை சிறை­வா­சம், ஊழல் வழக்­கு­கள், சர்ச்­சை­கள், எதிர்த்­த­ரப்பு அர­சி­யல் என பல­வற்­றை­யும் கடந்து, 24 ஆண்­டு­கள் காத்­தி­ருந்த பின்­னர் பிர­த­மர் கனவை அவர் அடைந்­துள்­ளார்.

கோலா­லம்­பூ­ரில் உள்ள அரச மாளி­கை­யில் நேற்று, கறுப்பு பாரம்­ப­ரிய மலாய் ஆடையை அணிந்­தி­ருந்த திரு அன்­வார் பத­வி­யேற்­றுக் கொண்­டார்.

மலே­சி­யத் தேர்­தல் முடிந்து ஆறு நாளா­கி­யும் அர­சாங்­கம் அமை­யா­ததை அடுத்து மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷா நேற்று காலை ஒன்­பது மலாய் அர­சர்­க­ளு­டன் சந்­திப்பு நடத்­தி­னார். அக்­கூட்­டத்­துக்­குப் பின்­னர் திரு அன்­வாரை மாமன்­னர் புதிய பிர­த­ம­ராக நிய­மித்­த­தாக அறிவிக்கப்பட்டது.

மாமன்­ன­ரின் முடி­வுக்கு பெரும் பாலான அர­சி­யல் கட்­சி­கள் இசைந்­தன. ஆனால், இரண்­டா­வது அதிக இடங்­க­ளைப் பெற்ற பெரிக்­க­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் தலை­வர் முகை­தீன் யாசின் அந்த முடிவை எதிர்த்­துள்­ளார்.

இருப்­பி­னும் தமது ஐக்­கிய அர­சாங்­கத்­தில் சேர பெரிக்­கத்­தா­னுக்கு அழைப்பு விடுக்­கப் போவ­தாக பிர­த­மர் அன்­வார் பின்­னர் நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­னார்.

பெரும்­பான்மை மலாய் இனத்­த­ வரின் உரி­மை­க­ளை­யும் மலே­சி­யா­வின் அதி­கா­ரத்­துவ இஸ்­லா­மிய சம­யத்­தை­யும் பாது­காக்­கும் அதே நேரத்­தில் எல்லா இனத்­த­வ­ரின் உரி­மை­க­ளை­யும் மலேசி­யா­வின் எல்லா நிலப் பரப்­பு­க­ளை­யும் தாம் பாது­காக்­கப் போவ­தாக அவர் கூறி­னார்.

வரும் நவம்­பர் 28ஆம் தேதியை அவர் பொது­வி­டு­மு­றை­யாக அறி­வித்­துள்­ளார்.

நேற்­றைய பத­வி­யேற்பு நிகழ்ச்­சி­யில் அர­சாங்­கத் தலை­மைச் செய­லா­ளர், தலைமை நீதி­பதி, தலைமை வழக்­க­றி­ஞர், நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளின் நாய­கர்­கள் உள்­ளிட்ட முக்­கிய அதி­காரி ­க­ளு­டன் பக்­கத்­தான் ஹரப்­பான், பாரி­சான் நேஷ­னல் எனப்­படும் தேசிய முன்­ன­ணி­யின் முக்­கிய தலை­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர். திரு அன்­வா­ரின் மனை­வி­யும் முன்­னாள் துணைப் பிர­த­ம­ரு­மான திரு­வாட்டி வான் அஸிஸா வான் இஸ்­மா­யி­லும் அவர்­க­ளின் ஆறு பிள்­ளை­களும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

"இந்த நம்­பிக்­கையை நான் பணி­வு­ட­னும் பொறுப்­பு­ட­னும் ஏற்­கி­றேன். என் அணி­யு­டன் சேர்ந்து, மக்­கள் விருப்­பத்­தின் வழி­காட்­டு­த­லின்­படி பெரு­மி­தம் நிறைந்த இப்­பொ­றுப்பை நான் நிறை­வேற்­று­வேன் என்று திரு அன்­வார் பத­வி­யேற்ற பின்­னர் டுவிட்­டர் தளத்­தில் பதி­விட்­டார்.

இளம் தலை­வ­ராக அம்­னோ­வில் சேர்ந்து வேக­மாக பதவி உயர்­வு­பெற்று 1993ஆம் ஆண்­டில் துணைப் பிர­த­மர் ஆனார் திரு அன்­வார். ஆனால் அப்­போ­தைய பிர­த­மர் மகா­தீர் முக­ம­துக்­கும் அவ­ருக்­கும் இடையே கருத்­து­வே­று­பா­டு­கள் அதி­க­ரித்­தன. 1998ல் அவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். அதற்­க­டுத்த ஆண்டு குற்­றச்­சாட்டு களின் பேரில் முதன்­மு­றை­யாக அவர் சிறை­சென்­றார்.

அந்­நே­ரத்­தில் திரு அன்­வார் தமது கெஅ­டி­லான் கட்­சியை தொடங்­கி­னார். மீண்­டும் 2015ல் ஓர் பாலின உற­வு­கொண்ட குற்­றச்­சாட்­டுக்­காக அவர் சிறைத் தண்­டனை பெற்­றார். ஆனால் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் பக்­கத்­தான் ஹரப்­பான் வெற்றி பெற்­றதை அடுத்து அவ­ருக்கு அரச மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது.

அம்னோ கட்­சி­யி­லி­ருந்து விலகி திரு அன்­வா­ரு­டன் கூட்­டணி அமைத்­தி­ருந்த டாக்­டர் மகா­தீர் மீண்­டும் பிர­த­மர் ஆனார். ஆனால் ஈராண்­டு­கள் கழித்து பிர­த­மர் பத­வியை திரு அன்­வா­ரி­டம் ஒப்­ப­டைப்­ப­தா­கக் கூறி­யி­ருந்த டாக்­டர் மகா­தீர், சொன்ன சொல்­லைக் காப்­பாற்­ற­வில்லை. மேலும், கெஅ­டி­லான் கட்­சி­யி­லி­ருந்து முக்­கிய தலை­வர்­கள் சிலர் கட்சி தாவி, அம்னோ தலை­மை­யில் மீண்­டும் அர­சாங்­கம் அமைக்­கப்­பட்­டதை அடுத்து, பிர­த­ம­ரா­கும் வாய்ப்பு திரு அன்­வா­ரின் கைவிட்­டுப் போனது.

நேற்று பதவி ஏற்­றுக்­கொண்ட திரு அன்­வா­ருக்கு சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் வாழ்த்­துக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். தேர்­த­லில் பலத்தை நிரூ­பித்த காட்­டிய பக்­கத்­தான் ஹரப்­பா­னுக்­கும் அவர் வாழ்த்து தெரி­வித்­தார்.

வட்­டார, உல­க­ளா­வி­ய சூழ­லில் மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யில் திரு அன்­வார் பிர­த­மர் பத­வியை ஏற்­றுள்­ள­தைச் சுட்­டிய திரு லீ, இச்­ச­வால்­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்­றார்.

மேலும் செய்திகள் - 8ஆம் பக்கம்