'குடும்பங்கள் கடன் வாங்குவதில் விவேகம் தேவை'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான குடும்­பங்­கள் வீட்டு அட­மா­னக் கடனை அடைக்­கும் நிலை­யில் இருக்­கின்­றன. அதே­வே­ளை­யில், வட்டி விகி­த­மும் பண­வீக்­க­மும் அதி­க­மாக இருப்­ப­தால் அவற்­றைத் தவிர்த்­துக் கொள்ள ஏது­வாக கடன் வாங்­கு­வோர் மிக­வும் விவே­க­மாக நடந்து கொள்ள வேண்­டும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அறி­வு­றுத்தி இருக்­கிறது.

வேலை­யின்மை விகி­தம் குறை­வா­கவே இருந்து வரு­கிறது. சம்­ப­ளம் தொடர்ந்து கூடு­கிறது. ஆகை­யால், பெரும்­பா­லான குடும்­பங் களுக்கு வீட்­டுக் கடனை அடைப்­பது உள்­ளிட்ட செல­வு­களை ஈடு­செய்ய போதிய நிதி­வ­ளம் இருக் கும் என்று ஆணை­யம் தன்­னு­டைய நிதி­வள நிலைப்­பாட்டு மறு­ப­ரி­சீ­லனை 2022 அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

ஆனால், பண­வீக்­கம் கூடு­வ­தால் செலவு அதி­க­ரிக்­கிறது. வட்டி விகி­த­மும் கூடு­கிறது. இத்­த­கைய நிலை­யில், சில குடும்­பங்­க­ளுக்கு நிதிப்­பி­ரச்­சி­னை­கள் ஏற்­ப­டக்­கூ­டும்.

ஆகை­யால் வீட்­டுக் கடனை அடைப்­பது அந்­தக் குடும்­பங் களுக்­குச் சிர­ம­மா­கி­வி­ட­லாம் என்று ஆணை­யம் எச்­ச­ரித்­தது.

எனவே குடும்­பங்­கள் மிக­வும் விவே­க­மாக நடந்து கொண்டு தங்­க­ளு­டைய நிதி வளங்­களை நிர்­வ­கிக்க வேண்­டும் என்று நேற்று வெளி­யிட்ட அந்த அறிக்­கை­யில் ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

உல­கில் வட்டி விகி­தம் அதி­க­ரிக்­கிறது. அதற்­கேற்ப சிங்­கப்­பூ­ரி­லும் வட்டி விகி­தங்­கள் அதி­க­ரித்து இருக்­கின்­றன. இத­னால், கடனை அடைப்­ப­தற்கு அதிக செல­விட வேண்­டிய நிலையை சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் எதிர்­நோக்கு­கின்­றன.

இருந்­தா­லும்­கூட பெரும்­பா­லான குடும்­பங்­க­ளைப் பொறுத்­த­வரை அவ்­வ­ள­வா­கப் பாதிப்பு இருக்­காது என்­பது ஆணை­யத்­தின் பரி­சோ­த­னைக் கணக்­கீ­டு­கள் மூலம் தெரிய வரு­கிறது. வீட்­டுக் கடனை அடைக்க இய­லா­மல் போகும் குடும்­பங்­க­ளின் விகி­தாச்­சா­ரம் தொடர்ந்து குறை­வா­கவே இருந்து வரும் வாய்ப்பு உள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது. சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளின் இருப்பு நிலை குறிப்பு பற்­றிய கண்­ணோட்­டத்­தை­யும் ஆணை­யம் வெளி­யிட்­டது.

நிக­ரச் சொத்து சென்ற ஆண்­டில் இருந்து 7.5% அதி­க­ரித்து $2.5 டிரில்­லி­ய­னா­கக் கூடி­யது. குடி­யி­ருப்­புச் சொத்­து­கள் 5.3% உயர்ந்­தன. இதன் கார­ண­மாக மொத்த குடும்ப சொத்­து­கள் ஒட்டு மொத்­த­மாக 6.9% அதி­க­ரித்­தன.

இருந்­தா­லும் கொவிட்-19 தொடர்­பான நிபந்­த­னை­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து குடும்பச் செல­வு­கள் கூடி இருக்­கின்­றன.

இத­னால் தனி­ந­பர் சேமிப்பு விகி­தம் 2022 மூன்­றா­வது காலாண்­டில் 35% ஆகக் குறைந்து இருக்­கிறது. இது 2021 முதல் காலாண்­டில் 40% ஆக உச்­சத்­தில் இருந்­தது. இதே­வே­ளை­யில், குடும்­பங் களின் கடன் சுமை தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது. வீட்­டுக்­க­டன் நிலை­யா­கக் கூடி­வ­ரு­வதே இதற்­கான கார­ணம். 2022, 3வது காலாண்­டில் குடும்­பக் கடன் 3.1% கூடி­யது. இதில் 2.7% வீட்டு கட­னா­கும். உல­கம் முழு­வ­தும் அதிக பண­வீக்­கம் நில­வு­வ­தால் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வ­டைந்து சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு உள்­ள­தாக ஆணை­யம் கூறி­யது.