புதுடில்லி: இந்தியா சுதந்திர நாடாகத் தொடராது என்றும் அது சுக்கு நூறாக உடைந்துவிடும் என்று பலர் நம்பிய காலம்போக, தற்போது இந்தியாவின் வேகமான மேம்பாடு, பொருளியல் வளர்ச்சி, உலகளவில் உயர்ந்துவரும் அதன் மதிப்பு ஆகியவற்றை உலகமே உற்று நோக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த அரசியல் சாசன நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய திரு மோடி, நாடு அதன் வேறுபாடுகளையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் அதேவேளையில் வளர்ச்சி அடைந்து வருவதாகச் சொன்னார்.
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நேற்று நிறைவடைந்ததை ஒட்டி, அத்தாக்கு தல்களில் உயிர்விட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார்.
இந்தியச் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருவதாகவும் மக்களுக்கு நீதிச் சேவைகள் எளிதாகவும் தங்கள் தாய்மொழியிலும் கிடைப்பதற்கு நீதித்துறை ஆவன செய்துவருவதாகவும் திரு மோடி கூறினார்.
இந்திய நீதிமன்றச் சேவை களைப் பெறுவதற்கான பல்வேறு மின்தளங்களை திரு மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

