லங்காவி: கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு

லங்காவி: கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு

1 mins read

நீந்­திக் களிப்­ப­தற்­காக கட­லுக்­குச் சென்ற நண்­பர்­கள் நால்­வ­ரில் இருவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர். இந்­தத் துயர சம்­ப­வம் லங்­கா­வி­யின் பந்­தாங் செனா­யில் நேற்று முன்­தி­னம் இரவு நிகழ்ந்­தது.

மாண்ட இரு­வ­ரும் சகோ­த­ரர்­கள் எனக் கூறப்­பட்­டது. ஆர் யுவ­ராஜ், 22, ஆர் ரவி­சங்­கர், 26, இரு­வரும் புக்­கிட் மெர்த்­தா­ஜாம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று லங்­காவி மாவட்ட காவல்­து­றைத் தலை­வர் ஷரி­மான் அஷாரி தெரி­வித்­தார்.

விடு­மு­றை­யைக் கழிப்­ப­தற்­காக 24 மற்­றும் 25 வய­து­டைய இரு நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்­கி­ழ­மை­யன்று சகோ­தரர்­கள் இரு­வரும் லங்­கா­வி சென்­ற­னர்.

இரவு 7 மணி­ய­ள­வில் நீந்­து­வதற்­காக அவர்­கள் கடற்­க­ரைப் பகு­திக்­குச் சென்­ற­னர்.

சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் 25 வயது நண்­ப­ரு­டன் நீந்­து­வ­தற்­கா­கக் கட­லில் இறங்­கி­னர். இன்­னொரு நண்­பர் கரை­யி­லேயே இருந்­து­விட்­டார்.

அப்­போது எழும்­பிய பேரலை ஒன்று, அம்­மூ­வ­ரை­யும் ஆழ­மான பகு­திக்கு இழுத்­துச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது. பீதி­ய­டைந்த ­மூ­வ­ரும் உதவி கேட்டு குரல் எழுப்­பி­னர்.

நண்­பர் மட்­டும் எப்­ப­டியோ நீந்திக் கரை­யே­றி­விட்­டார். கடற்­கரைப் பகு­தி­யில் பணி­யில் இருந்த மலே­சிய குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அவ­ருக்கு உத­வி­னர்.

ஆயி­னும், சகோ­த­ரர்­கள் இரு­வரும் கரை­தி­ரும்பவில்லை.

யுவ­ரா­ஜின் உடல் இரவு 9.30 மணிக்­கும் ரவி­சங்­க­ரின் உடல் நள்­ளி­ரவு 12.40 மணிக்­கும் மீட்­கப்­பட்­டது. இரு­வ­ரது உடல்­களும் சுல்­தானா மலிஹா மருத்­து­வ­மனைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டன.