அம்னோ கட்சி சட்டவிரோத
மானது என்று அறிவித்து அதைப் பதிவு நீக்கம் செய்யக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை மலேசிய உள்துறை அமைச்சு நிரா
கரித்துவிட்டதாக அக்கட்சியின் தலைவரும் மலேசியத் துணைப் பிரதமருமான அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அம்னோவின் கதையை முடிக்க தீட்டப்பட்ட சதி
முறியடிக்கப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்னோவைப் பதிவு நீக்க கோரியவர்களின் பெயர்களை திரு ஸாஹிட் வெளியிடவில்லை.
"அம்னோவைத் தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஒருவர் முறியடித்துள்ளார்," என்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மலேசிய சீன மகளிர் தொழில்முனைவர் சங்கத்தின் பத்தாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட திரு ஸாஹிட் தெரிவித்தார்.
திரு ஸாஹிட் குறிப்பிட்ட அந்த ஒருவர், மலேசியாவின் புதிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் ஆவார்.
அம்னோவைத் தடை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த அமைச்சர் சைஃபுதீனுக்கு திரு ஸாஹிட் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அம்னோவுக்குப் பதிலாகச் செயல்பட பெர்சத்து கட்சி நிறுவப்பட்டதாகவும் அந்த இலக்கை பெர்சத்து அடைந்துவிட்டதை அண்மையில் நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் பாகாங் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் சைஃபுதீன் அப்துல்லா கூறிய கருத்துகளுக்குப் பதிலடி தரும் வகையில் திரு ஸாஹிட்டின் உரை அமைந்தது.
"அம்னோவை ஓரங்கட்டும் அளவுக்கு பெர்சத்து கட்சி வளரவில்லை. அம்னோவைத் தடை செய்வது மட்டும் அக்கட்சியின் இலக்கல்ல. இதை அம்னோ
கட்சியினரும் மலேசியர்கள் அனைவரும் உணர வேண்டும்.
"பெரிக்காத்தான் நேஷனலை அம்னோவின் அடித்தள உறுப் பினர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து, முழுமையாக
நிராகரித்து ஒதுக்கிவிட வேண்டும் என்று திரு ஸாஹிட் கேட்டுக்கொண்டார்.

