திருமணங்களையொட்டிய மத
மாற்றங்களுக்கு 11 இந்திய
மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
அந்த மாநிலங்களின் சட்டத்தின்கீழ், வேறொரு சமயத்தைச் சேர்ந்த ஒருவரைக் கரம்பிடிக்கும் ஒருவர் தமது கணவர் அல்லது மனைவியின் மதத்துக்கு மாறினால் அது சட்டவிரோதமாகிவிடும்.
அதுமட்டுமல்லாது வற்புறுத்தி, ஆசைகாட்டி ஒருவரை மதம் மாற வைப்பதும் அந்த மாநிலங்களில் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.
பல சமய மக்களைக் கொண்ட இந்தியாவில், தேசிய அளவில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் இல்லை. ஆனால் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல மாநிலங்கள் தீவிரம் காட்டு
கின்றன. 2017ஆம் ஆண்டிலிருந்து ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்
தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் திருமணங்
களையொட்டிய மதமாற்றத்துக்குத் தடை விதித்துள்ளன.
மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்களில் பெரும்பாலானவை பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலமும் திருமணத்தையொட்டிய மதமாற்றத்துக்குத் தடை விதித்துள்ளது. பண ஆசையைக் காட்டி அப்பாவி மக்களை சில அமைப்புகள் மதம் மாறத் தூண்டுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு தெரிவித்தார். மதம் மாறிய இந்துக்கள் மீண்டும் இந்து சமயத்தைத் தழுவுவது குற்றமாக எடுத்துக்கொள்ளப்படாது.
மதமாற்ற சட்டங்களைப் பயன்
படுத்தி சிறுபான்மை இனத்தோரை இந்து தேசியவாத அமைப்புகள் மிரட்டி அவர்களுக்குத் தொல்லை விளைவிக்க முடியும் என்று அமெரிக்காவின் அனைத்துலக சமய உரிமை ஆணையம் அக்கறை தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் சமூகப் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது.

