உணவு உற்பத்தித் துறையில் மீள்திறன் நிறுவனங்கள் எழும்

உணவு உற்பத்தித் துறையில் மீள்திறன் நிறுவனங்கள் எழும்

2 mins read

புதுப்பிக்கப்பட்ட உருமாற்றத் திட்டம் உதயம்

இனி வரும் ஆண்­டு­களில் மீள்­

தி­றன்­மிக்க, நீடித்து நிலைக்­க­வல்ல நிறு­வ­னங்­களை உரு­வாக்­கு­வதே உணவு உற்பத்தித் துறை­யின் முக்­கிய அம்­ச­மாக இருக்­கும்.

இத்­து­றைக்­கான புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டத்­தின் நான்கு முக்­கிய நோக்­கங்­க­ளின் ஒன்று இது.

ரஷ்யா-உக்­ரேன் போர் போன்ற உலக நில­வ­ரங்­கள் கார­ண­மா­க­வும் கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மா­க­வும் வர்த்­த­கச் செல­வு­கள் உயர்ந்­து­வ­ரும் அதே­வேளை விநி­யோ­கத் தொட­ரில் இடை­யூ­று­கள் தொடர்­கின்­றன. இவற்றை வர்த்­த­கங்­கள் சமா­ளித்து வரும் நிலை­யில் இந்த நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

'உணவு உற்பத்தித் துறை உரு­மாற்­றத் திட்­டம் 2025' என்­னும் புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டம் நீடித்த நிலைத்­தன்மை போன்ற வள­ரும் துறை­களில் வாய்ப்­புப் பெற நிறு­வ­னங்­

க­ளுக்கு உத­வும். இந்த புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டத்தை மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டான் சீ லெங் நேற்று தொடங்கி வைத்­தார்.

உணவு விநி­யோ­கத்­தி­லும் விலை­க­ளி­லும் ஏற்ற இறக்­கங்­கள் நிகழ்­வ­தால் எளி­தில் பாதிப்­ப­டி­யும் தன்மை அதி­க­ரித்து வரு­வதை சிங்­கப்­பூர் கவ­னித்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கொள்­ளை­நோய், விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­கள் மற்­றும் எரி­சக்தி நெருக்­கடி போன்­ற­வற்­றால் இந்­நி­லைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர், திட்­டத்­தின் தொடக்க நிகழ்­வில் தெரி­வித்­தார்.

"பன்­மய பொருள் தரு­விப்பு, முக்­கிய உண­வுப் பொருள்­க­ளின் சேமிப்பு ஆகி­ய­வற்­றின் நமது நிறு­வ­னங்­கள் தங்­க­ளது விநி­யோ­கத் தொடர் மீள்­தி­றனை வலுப்­ப­டுத்த வேண்­டும் என விரும்­பு­கி­றோம்.

"அதே­நே­ரம் அவை சிறந்த முறை­யில் ஒருங்­கி­ணைந்து, உற்­பத்­தித் திறன்­களை அதி­கப்­ப­டுத்­து­வதை அந்­நி­று­வ­னங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.

"நீடித்த நிலைத்­தன்மை மீதான உல­கக் கவ­னம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், பசுமை உற்­பத்தி நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் வர்த்­தக சங்­கங்­க­ளு­ட­னும் தொழிற்­

ச­பை­க­ளு­ட­னும் நாம் இணைந்து பணி­யாற்­று­வோம்," என்­றார் டாக்­டர் டான்.

உணவு தொடர்­பான எட்டு வர்த்­த­கச் சங்­கங்­கள் இடம்­பெற்­றுள்ள சிங்­கப்­பூர் உண­வுக் கூட்­டணி நீடித்து நிலைக்­கக்­கூ­டிய திட்­டத்தை உரு­வாக்­கும் என்­றும் அதற்கு எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் ஆத­ர­வும் கிடைக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

முக்­கிய நிறு­வ­னங்­க­ளு­டன் ஒன்று­சேர்ந்து 'எண்­டர்­பி­ரைஸ்­எஸ்ஜி' அமைப்பு உரு­வாக்கி உள்ள புதுப்­பிக்­கப்­பட்ட தொழில்­துறை உரு­மாற்­றத் திட்­டம் சிங்­கப்­பூரை நம்­பத்­த­குந்த உணவு மைய­மாக உரு­வாக்­கும் நோக்­கம் கொண்­டது.

இதற்கு முந்­திய உரு­மாற்­றத் திட்­டம் 2016ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. அப்­போது முதல் உணவு உற்­பத்­தித் துறை நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தாக எண்­டர்­பி­ரைஸ் எஸ்ஜி கூறி­யது.

2020ஆம் ஆண்டு 51,000 ஊழி­யர்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி ­ய­லில் இந்­தத் துறை $4 பில்­லி­யன் பங்­க­ளித்­தது. இதற்கு முன்­னர் 2015ஆம் ஆண்டு 40,000 ஊழி­யர்­கள் இடம்­பெற்று இருந்­ததோடு பொரு­ளி­ய­லுக்கு இதன் பங்­க­ளிப்பு $3.7 பில்­லி­ய­னாக இருந்­தது.