திடீர் நிலச்சரிவில் பலர் உயிரோடு புதைந்தனர்

திடீர் நிலச்சரிவில் பலர் உயிரோடு புதைந்தனர்

3 mins read
3592d5ce-971c-496f-b728-8372f9356c92
-
multi-img1 of 2

மலேசியாவில் நிகழ்ந்த விபத்தில் ஒரு சிறுவன், ஆறு பெண்கள் உட்பட 21 பேர் மரணம்

மலே­சி­யா­வின் புகழ்­பெற்ற சுற்­று­லாத் தல­மான ஜெண்­டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த நிலச்­ச­ரி­வில் பலர் உயி­ரோடு புதை­யுண்­ட­தால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

இது­வரை 21 உடல்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இன்­னும் பல­ரைக் காண­வில்லை என்று நேற்று மதி­யம் மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரின் புற­ந­கப்­ ப­குதி யில் பத்­தாங் காலி­யில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்­கா­னிக் பண்­ணை­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பல முகாம்­கள் நிலச்­ச­ரி­வில் புதை யுண்டன. இதில் 25 பேர் வரை புதை­யுண்­ட­தாக உலு சிலாங்­கூர் காவல்­துறை தலை­வர் சுஃபியன் அப்­துல்லா நேற்று மதி­யம் தெரி­வித்­தார்.

அவர்­களை மீட்­கும் பணி­யில் 15 அர­சாங்க அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 394 பேர் தீவி­ர­மாக ஈடு­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

நேற்று மதி­யம் வரை 61 பேரை அதி­கா­ரி­கள் மீட்­ட­னர். காணா­மல் போன­வர்­களை தேடும் பணி தொடர்ந்து நடை­பெற்­றது.

இறந்­த­வர்­களில் ஒரு சிறு­வ­னும் ஆறு பெண்­களும் அடங்­கு­வர் என்று சுகா­தார அமைச்­சர் டாக்­டர் சலிஹா முஸ்­தபா தெரி­வித்­தார். அங்கு அமைக்­கப்­பட்­டி­ருந்த முகாம்­களில் 79 பேர் முதல் 100 பேர் வரை தங்­கி­யி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வியா­ழன் அதி­காலை 2.15 மணி­ய­ள­வில் விபத்து நிகழ்ந்­த­தாக உயிர்­பி­ழைத்த சிலர் கூறி­னர்.

முகாம் ஒன்­றில் குடும்­பத்­தோடு தங்­கி­யி­ருந்த 37 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான டீ இயோவ் கிங், இது­வரை தமது வாழ்க்­கை­யில் கேட்­டி­ராத பெரும் வெடிப்­புச் சத்­தத்­தைக் கேட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

விடி­யற்­காலை 2.00 மணி அள­வில் அவர் உறங்­கச் சென்­றார். அப்­போது பெரும் சத்­தம் கேட்­ட­தா­க­வும் மனைவி, பிள்­ளை­க­ளு­டன் வெளியே ஓடு­வ­தற்­குக்­கூட நேர­மில்­லா­மல் முகா­மி­லேயே பதுங்­கி­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

"நாங்­கள் அதிர்ஷ்­ட­சா­லி­கள்," என்­றார் அவர்.

சிலாங்­கூ­ரில் உள்ள உலு யாம் பாரு காவல் நிலை­யத்­தி­லி­ருந்து அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு பேட்­டி­ய­ளித்­தார். திரு டீ, அவ­ரது மனைவி, இரண்டு பிள்­ளை­க­ளான ஏழு வயது மகன், மூன்று வயது மகள் ஆகிய நால்­ வரும் காய­மின்றி உயிர்­தப்­பி­னர். திரு டீயும் அவ­ரது நண்­பர்­களும் விடுமுறை­யைக் கழிப்­ப­தற்­காக அங்கு சென்­ற­னர்.

டார்ச் விளக்கு உத­வி­யு­டன் பாதி­ய­ளவு புதைந்­தி­ருந்த குழந்­தை­யின் குடும்­பத்­துக்கு அவர்­கள் உதவி செய்­த­னர். 3.00 மணி­ய­ள­வில் திரு டீ உட்­பட உயிர் பிழைத்த அனை வரும் அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றப்­ பட்டு பாது­காப்­பான இடத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

மலே­சிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், நிலச்­ச­ரி­வி­னால் தாம் அதிர்ச்சி அடைந்து உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

நிலச்­ச­ரி­வில் காணா­மல் போன­வர்­களை உட­ன­டி­யாக தேடி மீட்­கும்­படி அவர் அதி­காரி களுக்கு உத்­த­ர­விட்­டார்.

"மலே­சி­யர்­களே, தேடி மீட்­புப் பணி­கள் சுமூ­க­மாக நடை­பெற வேண்­டும் என்று இறை­வ­னி­டம் பிரார்த்­தனை செய்­யுங்­கள்," என்று திரு அன்­வார் கேட்­டுக்கொண்­டார்.

இதற்­கி­டையே முகாம்­கள் உரி­மம் இல்­லா­மல் செயல்­பட்­ட­தாக தக­வல்கள் தெரிவிக் கின்றன.

"உரி­மம் பெறா­மல் சட்­ட­வி­ரோ­தமாக முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இயற்கை முறை­யில் காய்­க­றி­க­ளைப் பயி­ரி­டும் பண்ணை என்றே நடத்­து­நர்­கள் உரி­மம் பெற்று இருந்­த­னர்," என்று உள்­ளூர் அர­சாங்க மேம்­பாட்டு அமைச்­ச­ரான ஙா கோர் மிங் தெரி­வித்­தார்.

நீர்­வீழ்ச்சி, ஆறு, மலைப்­ப­குதி போன்ற இடங்­களில் உள்ள அனைத்து முகாம்­க­ளை­யும் அகற்ற உத்­த­ர­விட்­டுள்­ளேன் என்று கூறிய அவர், இதனை மீறு­வோ­ருக்கு 50,000 ரிங்­கிட் வரை அப­ரா­த­மும் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­தார்.

அங்கு வந்த உள்­துறை அமைச்­சர் சைஃபூதீன் நாசு­ஷன் இஸ்­மா­யில், அடுத்த உத்­த­ரவு வரை அனைத்து முகாம் நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்த உத்­த­ர­விட்­டுள்­ளார்.