இந்தியா, 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களையும் துல்லியமாகத் தாக்கும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
அக்னி-5 ஏவுகணை அணுவாயு தங்களை ஏந்திச் செல்லும் வல்லமை கொண்டவை.
சுமார் 5,000 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் எந்த இடத்தையும் அக்னி-5 ஏவுகணையைக் கொண்டு தாக்க முடியும் என்பதால் இந்தியாவின் தற்காப்பு ஆற்றல் மேலும் வலுப்பெற்றுள்ளது.
ஐயாயிரம் கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் சீனா, பாகிஸ்தான் உட்பட சில ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுஉள்ளன.
அண்மையில் தாவாங் எல்லையில் சீனப் படையினருடன் மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியா வியாழக்கிழமை இரவு அக்னி-5 ஏவுகணையை சோதித்துப் பார்த்தது.
ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து பாய்ந்து சென்ற ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது என்று இந்திய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீட்டரிலிருந்து 3,500 கிலோ மீட்டர் வரை பாய்ந்து செல்லக்கூடியவை.
ஏற்கெனவே இவை பரிசோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

