மலேசியாவில் ஊழல் விசாரணை தீவிரமடைகிறது

மலேசியாவில் ஊழல் விசாரணை தீவிரமடைகிறது

1 mins read

மலேசியப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மின் நிர்­வா­கம், முன்­னைய அர­சாங்­கத்­தின் நிதி முறை­கே­டு­களை மேலும் விரி­வாக விசா­ரிக்க முடிவு செய்து உள்­ளது.

அதன் ஒரு பகு­தி­யாக பெரி­காத்­தான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் தலை­வ­ரான முகை­தீன் யாசி­னின் 18 மாத பதவி காலத்­தில் செய்­யப்­பட்ட அனைத்து அர­சாங்க செல­வு­களும் விசா­ரிக்­கப்­பட விருக்­கின்­றன.

இதற்கு முன்பு கொவிட்-19 நிதி தொடர்­பான முறை­கேடு குறித்து விசா­ரிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இருந்­தா­லும் முகை­தீன் யாசின், அப்­போ­தைய நிதி அமைச்­சர் சஃப்ருல் அஸிஸ், அப்­போ­தைய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் ஆகி­யோர் யாரும் விசா­ர­ணைக்கு இது­வரை அழைக்­கப்­ப­ட­வில்லை என்று ஊழல் ஒழிப்புப் பிரிவின் விசா­ரணை அதிகாரி­கள் கூறி­னர்.

திரு முகை­தீன், 2020 மார்ச் முதல் 2021 ஆகஸ்ட் வரை­யில் பிர­த­ம­ராக இருந்­தார்.

அதன் பிறகு அம்னோ உதவித் தலை­வர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தலை­மை­யில் புதிய அர­சாங்­கம் அமைந்­தது. தற்­போ­தைய ஆளும் கூட்­ட­ணி­யில் அம்னோ இடம்­பெற்­றுள்­ளது.