மேலும் மூன்று சடலங்கள் மீட்பு

மேலும் மூன்று சடலங்கள் மீட்பு

3 mins read
ea0a0814-4df0-4c76-bfc5-39650d47c5c4
-

ஜென்டிங் ஹைலண்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஒன்பது பேர் கதி தெரியவில்லை

ஜென்­டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த நிலச்­ச­ரி­வில் காணா­மல் போன­வர்­க­ளைத் தேடும் பணி நேற்­றும் இரண்­டா­வது நாளாக தொடர்ந்­தது. மேலும் மூன்று சட­லங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு இயக்­கு­நர் நோரா­சம் காமிஸ் நேற்று மதி­யம் தெரி­வித்­தார்.

இன்­ன­மும் ஒன்பது பேரைக் காண­வில்லை என்­றார் அவர் நேற்றிரவு.

வெள்­ளிக்­கி­ழமை விடி­யற்­காலை 2.42 மணி­ய­ள­வில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. இதில் தலை­ந­கர் ேகாலா­லம்­பூர் புற­ந­கர்ப்­ப­கு­தி­யில் பத்­தாங்­ கா­லி­யில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்­கா­னிக் பண்ைண­யில் அைமக்­கப்­பட்­டி­ருந்த சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கான பல முகாம்­கள் புதை­யுண்­டன.

மொத்­தம் 94 பேர் விபத்­தில் சிக்­கி­னர். அவர்­களில் 61 பேர் உயி­ரோடு மீட்­கப்­பட்டு உள்ள நிலை­யில் பத்து பேரைக் காண­வில்லை.

நேற்று ஒரு பெண், ஒரு சிறுமி, ஒரு சிறு­வனின் சட­லங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இவர்­க­ளு­டன் சேர்த்து 24 பேர் மாண்டனர்.

"இரண்டு நாள் ஆகி­விட்­டது. இன்­ன­மும் புதை­யுண்­ட­வர்­க­ளைத் தேடி வரு­கி­றோம். மண்­ணுக்கு அடி­யில் பிரா­ண­வாயு கிடைக்­காது. காணா­மல் போன­வர்­கள் உயிர் பிழைக்­கும் வாய்ப்பு மிக­வும் குறைவு.

"பெரும்­பா­லான உடல்­கள் ஐந்து முதல் பத்து அடி ஆழத்­தில் புதைந்­தி­ருந்­தன. கை, கால்­கள தென்­பட்­ட­தைத் தொடர்ந்து சட­லங்­கள் மீட்­கப்­பட்­டன," என்று திரு நோரா­சம் காமிஸ் தெரி­வித்­தார்.

சுமார் 15 அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 394 ேபர் மீட்­டுப்பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கன­மழை கார­ண­மாக நேற்று முன்­தி­னம் இரவு மீட்­புப் பணி­கள் நிறுத்­தப்­பட்டு நேற்­றுக் காலை 8.30 மணி­ய­ள­வில் மீண்­டும் தொடங் கியது.

"உச்­சி­யி­லி­ருந்து தண்­ணீர் வழிந்­து­கொண்­டி­ருந்­த­தால் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­பட வேண்­டி­யி­ருந்­தது," என்று திரு நோரா­சம் காமிஸ் கூறி­னார்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு செய்­தி­யாளர் களி­டம் பேசிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம், விபத்­தில் இறந்த ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 10,000 ரிங்­கிட் நிதி­யு­தவி வழங்க உத்த­ர­ விட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார். விபத்­தில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு தலா 1,000 ரிங்­கிட் வழங்­க­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விபத்­தில் சிக்­கிய மூன்று சிங்­கப்­பூ­ரர்­கள் பாது­காப்­பாக இருப்­ப­தாக மலே­சிய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

இந்­தத் துய­ரச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்­கும் உட­னடி உதவி வழங்­கப்­படு வதை உறுதி செய்ய மலே­சிய அர­சாங்­கம் விரைந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு, விபத்­தில் சிக்­கி­ய­வர்­க­ளு­டன் தொடர்பு கொண்டு வேண்­டிய உத­வி­களைச் செய்து வரு­கிறது.

சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் பேரி­டர் குறித்து தங்­க­ளு­டைய அனு­தா­பக் கடி­தங்­களை மலே­சிய தலை­வர்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­துள்­ள­னர்.

மலே­சி­யப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்­தில் நிலச்­ச­ரி­வி­னால் ஏற்­பட்ட உயிர்ச்­சே­தங்­க­ளுக்­கும் காயம் அடைந்­த­வர்­கள் குறித்­தும் தாம் மிக­வும் வருந்­து­வ­தாக பிர­த­மர் லீ குறிப்­பிட்­டுள்­ளார்.

நிலச்­ச­ரி­வில் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர் ­க­ளுக்கு மலே­சிய அர­சாங்­கம் உத­வியதற்கு நன்றி தெரிவித்த திரு லீ, தேவை ஏற்ட்­டால் தேடி, மீட்­புப் பணி­யில் உதவ சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தயா­ராக இருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

மலே­சிய அர­சாங்­கத்­தின் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­யில் 450,000 கன மீட்­டர் நிலப் ­ப­குதி சரிந்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

சுமார் 30 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்த நிலப்­ ப­குதி 0.4 ஹெக்­டர் பரப்­ப­ள­வு நிலத்தை மூடி­விட்­டது. ஃபாதர்ஸ் ஆர்­கா­னிக் பண்ைண­யில் அமைக்­கப்­பட்ட முகாம்­கள் உரி­மம் இல்­லா­மல் செயல்­பட்­ட­தா­க­வும் தெரிவிக்கப்பட்டது.