மக்கள் எதிர்ப்பு காரணமாக கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் அதிரடியாக தளர்த்தியுள்ளது.
ஆனால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் முன்னெச் சரிக்கையின்றி தளர்த்தப்பட்டால் கட்டவிழ்த்து விட்டதுபோல தொற்றுநோய் அதிவேகத்தில் பரவக்கூடும் என்றும் 2023ல் அந்நாட்டில் ஒரு மில்லியன் பேர் அதற்கு உயிரிழிக்கலாம் என்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஐஎச்எம்இ' எனும் சுகாதார அளவீடு, மதிப்பீடு கழகம் முன்னுரைத்துள்ளது.
"ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச காலகட்டத்தில் 322,000 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்படுவர். நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டுவிடும்," என்று அதன் இயக்குநர் கிறிஸ்டஃபர் முர்ரே எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 மரண அலை தலைதூக்கி உள்ளது. "நாங்கள் 150 உடல்களை புதன்கிழமை தகனம் செய்தோம். இது, கடந்த குளிர்காலத்தைவிட அதிகம்," என்று பெய்ஜிங்கில் அரசுக்குச் சொந்தமான டோங்ஜியாவ் இறுதிச் சடங்கு ஏற்பாட்டு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து கொவிட்-19 மரண எண்ணிக்கை விவரங்களை சீன அதிகாரிகள் வெளியிடுவிதில்லை.

