அர்ஜென்டினாவின் கதாநாய கனான லயனல் மெஸ்ஸி, 35, இரு கோல்களைப் புகுத்தி, உலகக் கிண்ணத்தைக் கையில் பிடித்ததும் அந்த பெருமையான நிமிடத்தில் தன்னை மறந்து மனதை மாற்றிக்கொண்டார்.
ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவேன் என்ற அவர், தனது ஆட்டம் இன்னும் தொடரும் என்று கூறியுள்ளார்.
பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டி, அவரது வாழ்க்கையில் இதுவரை இல்லாத மிகச்சிறந்த விளையாட்டாக அமைந்தது. அந்த சிறப்பான இரவுக்குப் பிறகு அர்ஜென்டினாவுக்குத் தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.
"இது, நம்ப முடியாதது. உலகக் கிண்ணத்தைக் கடவுள் எனக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும். இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்தக்கனவு நீண்டகாலமாக இருந்தது.
"இதனுடன் ஓய்வு பெறவும் விரும்பினேன். ஆனால் தேசிய அணியிலிருந்து விலகப்போவதில்லை. உலகக் கிண்ணத்தின் வெற்றியாளராக அர்ஜென்டினா சட்டையை அணிந்து தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்," என்று மெஸ்ஸி கூறினார்.
அர்ஜென்டினாவின் பயிற்றுவிப் பாளரான லயனல் ஸ்கலோனியும் மெஸ்ஸி, மேலும் ஓர் உலகக் கிண்ணப் போட்டிக்கு விளையாடலாம் என பரிந்துரைத்துள்ளார்.
"மெஸ்ஸி விளையாட விரும்பினால் அவர் எங்களுடன் இருப்பார். இப்போது தனது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவருக்கும் அவரது அணிக்கும் பயிற்சியளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி," என்று ஸ்கலோனி தெரிவித்தார்.

