தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது; கப்பலோடு மாலுமிகளைக் காணவில்லை

தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது; கப்பலோடு மாலுமிகளைக் காணவில்லை

2 mins read
b52ca4d8-b18c-4b94-ade4-b46a00c075d9
-
multi-img1 of 2

தாய்­லாந்து கடற்­ப­டைக்­குச் சொந்த மான போர்க்­கப்­பல் ஒன்று பலத்த காற்று மற்­றும் அலை­யில் சிக்கி மூழ்­கி­ய­தில் 31 மாலு­மி­கள் காண­வில்லை.

ஞாயிறு இரவு 'எச்­டி­எம்­எஸ் சுகோ­தாய்' எனும் போர்க்­கப்­பலி லிருந்து 73 மாலு­மி­கள் மீட்­கப்பட்­ட­னர். எஞ்­சிய 33 பேரு­டன் கப்­பலை கைவிட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது என்று தாய்­லாந்து கடற்­படை தெரி­வித்­தது.

பலத்த காற்­றில் ஒரு பக்­க­மாக சாய்ந்த போர்க்­கப்­ப­லில் தண்­ணீர் புகுந்­தது என்று கடற்­படை பேச்­சா­ளர் போக்­ரோங் மோன்­தாட்­பா­லின் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தார்.

குழாய் வழி­யாக கடல்­நீர் கப்­ப­லுக்­குள் புகுந்­த­தும் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது. இத­னால் மாலு­மி­கள் கப்­ப­லின் கட்­டுப்­பாட்டை இழந்­த­னர். கப்­ப­லின் மேற்­ப­ரப்­பி­லும் கடல்­நீர் மள­ம­ள­வென புகுந்­த­தும் அது மூழ்­கத் தொடங்­கி­யது என்றார் அவர்.

அந்த சம­யத்­தில் 'எச்­டி­எம்­எஸ்' போர்க்­கப்­பல், மத்­திய தாய்­லாந்­தின் பங் சப்­ஹான் மாவட்­டத்­தி­லி­ருந்து 32 கிலோ மீட்­டர் தொலை­வில் கட­லில் சுற்­றுக்­கா­வல் மேற்கொண்டது.

தாய்­லாந்து வளை­கு­டா­வில் சூறா­வளி எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஞாயிறு, திங்­கள் ஆகிய இரு நாள்­க­ளி­லும் பலத்த காற்­று­டன் கன­மழை பெய்­யும் என வானிலை நிலை­யம் எச்­ச­ரித்தது. பட­குச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

இந்த நிலையில் இரவு 11.30 மணி­ய­ள­வில் போர்க்­கப்­பல் மூழ்­கத் தொடங்கியதும் கடற்படைக் கப்­பல்­க­ளை­யும் இரண்டு ஹெலி­காப்­டர்­க­ளை­யும் அனுப்பி ராணு­வம் மீட்­புப் பணி­களை முடுக்கி­விட்­டது.

கப்­ப­லி­லி­ருந்த மாலு­மி­கள் அனை­வ­ரும் பாது­காப்­பாக இருப்­ப­தாக ஆரம்­பத்­தில் கடற்­படை கூறி­யது.

பின்­னர் வெளி­யி­டப்­பட்ட ஃபேஸ்புக் பதி­வில் இன்­னும் 33 பேர் மீட்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என்று அது தெரி­வித்­தது.

கப்­ப­லைச் சுற்றி இருட்டில் பாது­காப்­புக் கவ­சம் அணிந்த ஊழி­யர்­க­ளு­டன் சிறிய பட­கு­களில் மாலு­மி­கள் ஏற்­றிச் செல்லப்படுவதை சமூக ஊட­கங்­களில் வெளி­யான சில காணொ­ளி­கள் காட்­டின. ஆனால் எத்­தனை பட­கு­கள் பயன் ­ப­டுத்­தப்­பட்­டன என்­பது குறித்து தகவல் இல்லை.

அமெ­ரிக்­கா­வில் உரு­வாக்­கப்­பட்ட சுகோ­தாய் போர்க்­கப்­பல் 1987ஆம் ஆண்­டி­லி­ருந்து தாய் லாந்து கடற்படையில் சேவையாற்றி வந்தது.