தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

1 mins read

தமிழ்மொழி­யின் வளர்ச்­சிக்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று தமி­ழக அர­சுக்கு சென்னை உயர் நீதி­மன்ற மதுரை கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மது­ரையை சேர்ந்த ஸ்டா­லின் என்­ப­வர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது­நல வழக்கு ஒன்றைத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

அதில், மது­ரை­யில் உல­கத் தமிழ்ச் சங்­கம் திறக்­கப்­பட்டு நான்கு ஆண்­டு­க­ளுக்கு மேலாகி­யும் தமிழ்மொழி வளர்ச்­சிக்கு தேவை­யான கட்­ட­மைப்பு வச­தி­கள் ஏற்படுத்தப்படவில்லை. நூல­கத்­தில் தர­மான நூல்­கள் இல்லை எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மேலும், உலகத் தமிழ்ச் சங்­கத்­தில் உள்ள நூல­கத்­தில் தமிழ் வளர்ச்­சிக்குத் தேவை­யான அனைத்துத் தமிழ் நூல்­கள், தமிழ் ஆராய்ச்சி நூல்­கள், தமிழ் மொழி வளர்ச்­சி­யு­டன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்­க­வும், நூல­கத்­தில் புதிய அடிப்­படை வசதி­களை ஏற்­ப­டுத்தித் தர­வும் உத்­த­ர­விட வேண்­டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை விசா­ர­ணைக்கு வந்­த­போது, மதுரை உல­கத் தமிழ்ச் சங்­கம் சார்­பில் துணை இயக்­கு­நர் நீதி மன்றத்தில் முன்னிலையாகி, விளக்­கம் அளித்­தார்.

இந்த நிலை­யில் இவ்­வ­ழக்­கில் நீதி­ப­தி­கள் மகா­தே­வன், சத்ய நாரா­யண பிர­சாத் அமர்வு நேற்று முன்­தி­னம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளனர்.

அதில், தமிழ் மொழியை வளர்க்க தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அதற்கு தேவை­யான நிதியை ஒதுக்க வேண்­டும். சங்க காலத் தமிழ் இலக்­கி­யங்­க­ளை­யும், நவீன காலத் தமிழ் இலக்­கி­யங்­க­ளையும் பிர­ப­லப்­ப­டுத்­தும் வகை­யில் பல்வேறு நிகழ்­வு­களை தமி­ழக அரசு முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.