25 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

25 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

1 mins read
f064046e-63d9-45cb-afa1-00621bf60d22
-

பாகிஸ்­தான் பயங்­க­ர­வாத எதிர்ப்பு மையத்­திற்­குள் நுழைந்த பயங்­க­ர­வா­தி­களில் 25 பேரை அந்­நாட்டு ராணு­வத்­தி­னர் சுட்­டுக்­கொன்­ற­னர். சண்டையில் ராணுவ வீரர்­கள் இரு­வர் உயிரிழந்­த­னர்; பத்­துப் பேர் காய­முற்­ற­னர். சண்டையில் பயங்­க­ர­வா­தி­க­ளால் பிணை பிடிக்­கப்­பட்ட பாது­கா­வல் அதி­காரி ஒரு­வ­ரும் மாண்­டு­போனார்.

கடந்த ஞாயி­ற்றுக்கிழமை பாகிஸ்­தானின் வட­மேற்­கில் அமைந்­துள்ள பன்னு நக­ரில் இருக்­கும் அம்­மை­யத்­திற்­குள் 35 பயங்­க­ர­வாதி­கள் புகுந்­த­னர். தங்­க­ளைத் தடுத்­த­வர்­களை அடக்­கி­ய­தோடு, அவர்­களி­டம் இருந்த ஆயு­தங்­க­ளை­யும் பயங்­க­ர­வா­தி­கள் பறித்­துக்­கொண்­டனர்.

இரண்டு நாள் முற்­று­கைக்­குப்­பின் ராணு­வப் படை­யி­னர் நேற்று முன்­தி­னம் அதி­ர­டி­யாக உள்ளே நுழைந்­த­னர். அப்­போது, பயங்­க­ர­வா­தி­களில் எழு­வர் சர­ண­டைந்­து­விட்­ட­தா­க­வும் தப்ப முயன்ற மூவர் கைது­செய்­யப்­பட்­ட­தா­க­வும் ராணுவப் பேச்­சா­ளர் மேஜர் ஜென­ரல் அக­மது ஷரிஃப், ஜியோ செய்­தித் தொலைக்­காட்­சி­யி­டம் தெரி­வித்­தார்.

"நிபந்­தனை ஏது­மின்றி சர­ண­டை­யும்­படி பயங்­க­ர­வா­தி­க­ளி­டம் பல­முறை கேட்­டுக்­கொண்­டோம். ஆனால், அவர்­கள் அதனை ஏற்­க­வில்லை," என்று திரு ஷரிஃப் விளக்­கி­னார்.

பயங்­க­ர­வா­தி­கள் பாது­காப்­பாக ஆப்­கா­னிஸ்­தா­னுக்­குச் செல்ல விரும்­பி­னர் என்­றும் ஆனா­லும் அவர்­க­ளின் கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை என்­றும் திரு ஷரிஃப் சொன்­னார்.

முன்­ன­தாக, ஹெலி­காப்­டர்­கள் மேலே வட்­ட­மிட்­டன என்­றும் அம்­மை­யத்­திற்கு அருகே வெடிச்­சத்­தம் கேட்­டது என்­றும் உள்­ளூர்­வா­சி­கள் தெரி­வித்­த­னர்.

பயங்­க­ர­வா­தி­களில் பலரும் தெஹ்­ரீக்-இ-தலி­பான் பாகிஸ்­தான் (டிடிபி) அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் எனக் கூறப்­பட்­டது.

முன்­ன­தாக, கடந்த ஞாயி­றன்று பன்னு வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு காவல் நிலை­யத்­தின்­மீது பயங்­க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் காவலர் நால்­வர் கொல்­லப்­பட்­ட­னர்.