கொவிட்-19 தொற்றின் பிடியில் ஷாங்காய்: மோசமான சூழலைச் சமாளிக்க தயார்நிலை

கொவிட்-19 தொற்றின் பிடியில் ஷாங்காய்: மோசமான சூழலைச் சமாளிக்க தயார்நிலை

3 mins read

புதிய வகை கொரோனா கிரு­மி­யால் பெரும் சிர­மத்­திற்கு ஆளாகி இருக்­கும் சீனா­வில் மோச­மான நிலைமை தொட­ர்கிறது. குறிப்­பாக, சீனா­வின் ஆகப்­பெ­ரிய நக­ர­மான ஷாங்­கா­யில் ஏரா­ள­மான மக்­கள் கொவிட்-19 தொற்­றால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர்.

நக­ரில் உள்ள மொத்த மக்­கள்­தொ­கை­யான 25 மில்­லி­யன் பேரில் இன்­னும் ஒரு வாரத்­தில், அதா­வது ஆண்­டி­று­திக்­குள் பாதிக்­கும் மேற்­பட்­டோரை கிருமி தொற்­றும் அபா­யம் உள்­ளது. இதனை ஷாங்­காய் டேஜி மருத்­து­வ­மனை 'வீசாட்' சமூக ஊட­கத்­த­ளத்­தின் வாயி­லா­கத் தெரி­வித்து உள்­ளது.

ஷாங்­கா­யில் இது­வரை பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5.43 மில்­லி­யன் பேர் என்று மதிப்­பி­டு­வ­தா­க­வும் இந்த எண்­ணிக்கை இன்­னும் ஒரு­சில நாள்­களில் 12.5 மில்­லி­யனைத் தொட்­டு­வி­டும் அபா­யம் உள்­ளது என்­றும் அந்த மருத்­து­வ­மனை தெரி­வித்துள்­ளது.

இதன் கார­ண­மாக ஆக மோச­மான நிலை­மை­யைச் சமா­ளிக்­கத் தயார்­நி­லை­யில் இருக்­கு­மாறு தனது ஊழி­யர்­களை அந்த மருத்­து­வ­மனை அறி­வு­றுத்தி இருக்­கிறது.

தொற்­றுப் பர­வல் கார­ண­மாக இந்த ஆண்­டின் கிறிஸ்­துமஸ் கொண்­டாட்­டங்­களும் ஆங்­கில, சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டங்­களும் பாது­காப்­பற்­ற­வை­யாக தான் கருது­ வ­தா­க­வும் புதன்­கி­ழமை பின்­னே­ரத்­தில் 'வீசாட்' ஊட­கத்­தில் அந்த மருத்­து­வ­மனை வெளி­யிட்ட பதிவு குறிப்­பிட்­டது.

கொவிட்-19 தொற்று அறவே இருக்­கக்­கூ­டாது என்­னும் கொள்­கை­யைப் பின்­பற்றி வந்த சீனா, இந்த மாதம் எழுந்த மக்­க­ள் எதிர்ப்­பைத் தொடர்ந்து அக்­கொள்­கையை கைவிட்­டது. அதே­நே­ரம் தொற்­றுப் பர­வல் தணிந்­த­பா­டில்லை.

இருப்­பி­னும், 2020ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் பர­வத் தொடங்­கிய கொரோ­னா­வால் இது­வரை உயி­ரி­ழந்­தோ­ரின் அதி­கா­ர­பூ­ர்வ எண்­ணிக்கை 5,241 என சீனா கூறி வரு­கிறது. இந்த வாரம் செவ்­வாய், புதன்­கி­ழ­மை­களில் ஒரு கொரோனா மர­ணம்­கூட நிக­ழ­வில்லை என்­றும் சீனா தெரி­வித்­தது.

ஆனால், தக­னச் சாலை­க­ளுக்­கான தேவை கடந்த வாரம் அதி­க­ரித்­த­தாக அவற்­றின் ஊழி­யர்­கள் கூறி­னர். தேவை அதி­க­ரிப்­பால் தக­னச் சாலை­க­ளுக்­கான கட்­ட­ண­மும் அதி­க­ரித்­து­விட்­டது.

கொரோனா மர­ணம் என்று வகைப்­ப­டுத்­து­வ­தற்­கான அள­வு­கோலை சீனா கீழி­றக்­கி­யுள்­ளது மரண எண்­ணிக்கை அறி­விப்­பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம் என ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

ஷாங்­கா­யின் ஆகப்­பெ­ரிய பொது மருத்­து­வ­ம­னை­யான டோங்­ரென் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர்­கள், தீவிர சிகிச்­சைப் பிரிவு நோயா­ளி­களை நடை­பா­தை­யில் வைத்து சிகிச்சை அளிப்­பதை நேற்று முன்­தி­னம் (புதன்­கி­ழமை) கண்­ட­தாக ஊட­கங்­கள் கூறின.

கள்­ளச்­சந்­தை­யில் மருந்­து­கள்

மருந்­து­க­ளுக்­கும் சீனா­வில் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு உள்­ளது. குறிப்­பாக, 'பேக்ஸ்­லோ­விட்' என்­னும் ஃபைசர் நிறு­வன கிரு­மித்­த­டுப்பு மருந்து கள்­ளச்­சந்­தை­யில் விற்­கப்­பட்டு வரு­கிறது. அதே­நே­ரம் சீனா­வில் விற்­ப­னைக்கு அனு­ம­திக்­கப்­

ப­டாத நோயெ­திர்ப்பு மருந்­து­களை வாங்க இணை­யத்­த­ளங்­களை பல­ரும் நாடு­வ­தா­க­வும் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, சீனா­வில் உள்ள தனது நாட்டு மக்­க­ளுக்­காக ஃபைசர் தடுப்­பூ­சி­களை ஜெர்­மனி அனுப்பி வைத்­துள்­ளது. சீனா­வில் கிட்­டத்­தட்ட 20,000 ஜெர்­மா­னி­யர்­கள் வசிக்­கி­றார்­கள். அதே­நே­ரம் சீன மக்­க­ளுக்கு சீனா­வின் சொந்­தத் தயா­ரிப்பு தடுப்­பூ­சி­களே பயன்­

ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், ஜன­வரி முதல் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கான தனிமை உத்­த­ரவை சீனா நீக்க திட்­ட­மி­டு­வ­தாக தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் கூறின.

சீனா, தனது மூன்­றாண்டு கொள்­கை­யைக் கைவிட்டு '0+3' என்­னும் புதிய கொள்கை பற்றி பரி­சீ­லித்து வரு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக, வெளி­நாட்­டுப் பய­ணி­கள் ஹோட்­டல்களிலோ தனி­மைக்­கான வசிப்­பி­டங்­க­ளிலோ தங்­கி­யி­ருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவை அது முடி­வுக்­குக் கொண்­டு­வர உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.