மணமகள் தட்டுப்பாடு: வேதனை ஊர்வலம்

1 mins read
b170fd7e-578d-4d38-8268-30d8f6115030
-

இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் ஆண்­க­ளைக் காட்­டி­லும் பெண்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­தால் மண­மு­டிக்க பெண் கிடைப்­பது குதி­ரைக் கொம்­பாக இருக்­கிறது. இதனை எடுத்­து­ரைக்­கும் விதத்­தில் குதி­ரை­யில் 50 ஆண்­கள் மண­ம­கன் வேட­மிட்டு ஊர்­வ­ல­மா­கச் சென்­ற­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் சோலாப்­பூ­ரில் நடை­பெற்ற இந்த ஊர்­வ­லத்­திற்கு ஜோதி கிராந்தி பரி­ஷத் என்­னும் அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. திரு­ம­ண­மா­காத ஐம்­பது ஆண்­கள் ஐம்­பது குதி­ரை­களில் சோலாப்­பூர் வீதி­களில் சென்­ற­னர். மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் ஊர்­வ­லம் முடி­வுற்­றது. ஆட்­சி­ய­ரி­டம் கோரிக்கை மனு ஒன்றை அவர்கள் அளித்­த­னர்.

அதில், "மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் 1,000 ஆண்­க­ளுக்கு 889 பெண்­கள் என்ற விகி­தத்­தில் பாலி­ன விகிதம் உள்­ளது. இத­னால், மணப்­பெண் கிடைப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த பாலின ஏற்­றத்­தாழ்­வுக்கு பொறுப்­பேற்று அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்­டும். கர்ப்­பி­ணி­க­ளின் வயிற்­றில் இருக்­கும் குழந்­தை­யின் பாலி­னத்­தைக் கண்­ட­றி­வ­தற்­குக் கடு­மை­யான தண்­டனை வேண்­டும்," என்று அவர்­கள் அந்த மனு­வில் குறிப்­பிட்­டுள்­ள­னர். பெண் சிசு கொலையே பெண்­க­ளின் எண்­ணிக்கை சரி­வ­தற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.