கொழும்பு நகரில் புதுக்கோலம் பூண்ட போராட்டக்களம்

கொழும்பு நகரில் புதுக்கோலம் பூண்ட போராட்டக்களம்

2 mins read
fed68fce-d4da-4965-a042-6317fe700615
-

இலங்கை அர­சாங்­கத்தை எதிர்த்து கொந்­த­ளித்த மக்­கள் ஒன்­று­கூ­டிய போராட்­டக்­க­ளம் கிறிஸ்­து­மஸ் அலங்­கா­ரம் பூண்­டுள்­ளது.

இலங்கை ராணு­வம் அந்த இடத்­தில் விழாக்­கால கொண்­டாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டிக்கு இட்­டுச் சென்­ற­தா­கக் கூறி நாட்­டின் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக கடந்த ஏப்­ரல் மாதம் எதிர்த்­துக் கிளம்­பிய இலங்கை மக்­கள் கொழும்பு நக­ரின் கடல்­மு­கப்­புப் பகு­தி­யில் கூடா­ரம் அமைத்து தங்கி போராட்­டம் நடத்­தி­னர்.

அப்­போது அதி­ப­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் அப்­போ­தைய பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­வும் பதவி வில­கக்­கோரி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் இந்த கூடா­ரத்­தைச் சுற்றி திரண்­டி­ருந்து முழக்­கம் எழுப்­பி­னர்.

போராட்­டம் வலுப்­பெற்­ற­தைத் தொடர்ந்து இவ்­வி­ரு­வ­ரும் பதவி வில­கி­னர். நாட்­டை­விட்டே ஓடும் நிலை கோத்­த­பாய ராஜ­பக்­சே­வுக்கு ஏற்­பட்­டது.

அதி­பர் மாளி­கைக்கு அரு­கில் உள்ள அந்த போராட்­டக்­க­ளம் தற்­போது புதுக்கோலம் பூண்டுள்ளது.

மக்­கள் திரண்டு வந்து கொண்­டாட்­டங்­களில் ஈடு­படும் வகை­யில் அந்த இடத்­தின் தோற்­றத்தை முற்­றி­லு­மாக மாற்­றி­விட்­டது இலங்கை ராணு­வம். பெரிய பெரிய கிறிஸ்­து­மஸ் மரங்­களை பல வண்­ணங்­களில் அவர்­கள் நட்டு வைத்து உள்­ள­னர். அலங்­கார பேருந்து ஒன்­றும் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ளது. நாய்­கள் பங்­கேற்­கும் கேளிக்கை நிகழ்ச்­சி­யும் அங்கு நடத்­தப்­ப­டு­கிறது.

அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க அர­சாங்­கத்­தின் பலத்­தைக் காட்ட போராட்­டக்­க­ளத்தை கொண்­டாட்டத்தல­மாக மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள் என்று கொழும்­பில் இயங்­கும் 'பாலிசி ஆல்­டர்­நேட்­டி­விஸ்' என்­னும் சிந்­தனை மன்­றத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான பாக்­கி­ய­ஜோதி சர­வ­ண­முத்து தெரி­வித்து உள்­ளார்.

போராட்­டக்­கா­ரர்­க­ளி­டம் இருந்து மீட்கப்பட்ட பகுதி முழு­மை­யாக ராணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டுக்­குள் உள்­ளது என்­பதை நிரூ­பிக்­க­வும் அவர்­கள் அந்த இடத்தை விளக்­கொ­ளி­யில் மின்­னச் செய்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.