இந்தியாவில் கொவிட்-19 ஆயத்தநிலை ஒத்திகை

இந்தியாவில் கொவிட்-19 ஆயத்தநிலை ஒத்திகை

2 mins read

கொவிட்-19 தொற்­றுப் பர­வல் திடீ­ரென உய­ரும் பட்­சத்­தில், அவ­ச­ர­கால அள­வில் அதனை எதிர்­கொள்ள நாடு தயா­ராக உள்­ளதா என்­பதை மதிப்­பி­டு­வ­தற்­காக நாளை மறுநாள் 27ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை நாழு முழு­தும் கொவிட்-19 மேலாண்மை ஆயத்­த­நிலை ஒத்­திகை இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த ஒத்­தி­கை­யில் நாடு முழு­வது­முள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் பங்­கு­கொள்­ளும்.

நாட்­டில் கொவிட்-19 தொற்று பாதிப்பு, உள்­கட்­ட­மைப்பு தயார்­நிலை, தடுப்­பூசி நட­வ­டிக்கை முத­லி­யவை குறித்து பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யில் கடந்த 22ஆம் தேதி உயர்­நி­லைக் குழு கூட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது, உயிர்­வா­யுக் கலன்­கள், உயிர்­வாயு உற்­பத்தி ஆலை­கள், செயற்கை சுவா­சக் கரு­வி­கள், மனி­த­வ­ளம் உள்­ளிட்­டவை போதிய அள­வில் இருந்து, மருத்­து­வ­ம­னை­கள் தயார்­நி­லை­யில் உள்­ள­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறு மாநிலங்­க­ளுக்­குப் பிர­த­மர் மோடி அறி­வு­றுத்­தி­னார்.

அத­னைத் தொடர்ந்து, இந்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வி­யா­வும் மாநில சுகா­தார அமைச்­சர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தினார்.

அப்­போது, நாடு தழு­விய ஒத்­திகை குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது. அந்­ந­ட­வ­டிக்­கைக்கு அனைத்து மாநி­லங்­களும் ஒத்­து­ழைப்பு அளிப்­பதாக உறு­தி­ய­ளித்­தன.

இந்த ஒத்­தி­கை­யின்­போது, புறநோயாளிப் பிரிவுகளில் பணியில் இருக்கும் மருத்­து­வர்­களும் தாதி­யரும் தனி­ந­பர் பாது­காப்பு அங்கி அணிந்­த­படி நோயா­ளி­க­ளுக்கு மூச்­சுப் பிரச்­சினை­கள் உள்­ள­னவா எனப் பரி­சோ­திப்­பர். அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களும் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களும் முழு எண்­ணிக்­கை­யிலான பணி­யா­ளர்­களு­டன் இயங்­கும்.

"தனி­ந­பர் பாது­காப்பு அங்கி, உயிர்­வாயு விநியோகம் மற்­றும் கண்­கா­ணிப்பு, செயற்கை சுவா­சக் கரு­வி­கள் போன்­ற­வற்­றின் தயார்­நிலை மதிப்­பி­டப்­படும். ஏதே­னும் குறை­பாடு அல்­லது பற்­றாக்­குறை இருப்­பின், அவை சரி­செய்­யப்­படும். அதன்­மூ­லம் நெருக்­க­டி­நிலை ஏற்­படு­வ­தைத் தவிர்க்க முடி­யும்," என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது. ஆயி­னும், சீனா உள்­ளிட்ட பல நாடு­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­வ­தால் சுகா­தார உள்­கட்­ட­மைப்­பின் ஆயத்­த­நிலை மதிப்­பி­டப்­பட்டு வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கட்டாய 'பிசிஆர்' பரிசோதனை

இதற்­கி­டையே, சீனா, ஜப்­பான், தென்­கொ­ரியா, ஹாங்­காங், தாய்­லாந்து ஆகிய ஐந்து நாடு­களில் இருந்து வரும் பய­ணி­கள் அனை­வ­ரும் கட்­டாய 'ஆர்டி-பிசி­ஆர்' பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும் என்று அமைச்­சர் மாண்­ட­வியா தெரி­வித்­திருக்கிறார். தொற்று அறிகு­றி­யுள்­ளோர் தனி­மைப்­ப­டுத்­தப்­படு­வர்.

அத்­து­டன், இந்த ஐந்து நாடு­களில் இருந்து வரு­வோர் தங்­க­ளின் உடல்­நிலை குறித்த தக­வல்­க­ளைக் குறிப்­பி­டும் வகை­யில் 'ஏர் சுவிதா' படி­வத்­தை­யும் நிரப்ப வேண்­டும் என்­றும் அவர் கூறியுள்ளார்.