பிலிப்பீன்ஸைப் புரட்டிப்போட்ட வெள்ளம்; மக்கள் தவிப்பு

பிலிப்பீன்ஸைப் புரட்டிப்போட்ட வெள்ளம்; மக்கள் தவிப்பு

2 mins read
261b8bf5-9d35-4ac7-84d3-93dd961ecfb9
-

கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று பிலிப்­பீன்ஸ் வெள்­ளத்­தில் தத்­த­ளித்­தது. ஏறத்­தாழ 46,000 பேர் வீடுகளி­

லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தாக அந்­நாட்டு குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பிலிப்­பீன்­ஸின் தெற்கு, கிழக்­குப் பகு­தி­களில் பெய்த கன­மழை கா­ர­ண­மாக வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. வெள்­ளம் கார­ண­மா­கக் குறைந்­தது எட்டு பேர் மாண்­ட­னர். 19 பேரைக் காண­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"சில பகு­தி­களில் வெள்­ள­நீர் நெஞ்சு அள­வுக்கு உயர்ந்­தது. ஆனால் இன்று மழை குறைந்­துள்­ளது," என்று ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பிலிப்­பீன்ஸ் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று கூறி­யது.

வெள்­ளத்­தால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட ஒசா­மிஸ் நக­ரி­லி­ருந்­தும் கிளா­ரின் நக­ரி­லி­ருந்­தும் பல குடும்­பங்­க­ளைக் காப்­பாற்­றி­ய­தாக பிலிப்­பீன்ஸ் கட­லோ­ரக் காவல்­படை தெரி­வித்­தது.

ஆரஞ்சு நிற பாது­காப்பு மித­வை­ ஆடைகளை அணிந்த மீட்­புப் பணி­யா­ளர்­கள், இடுப்பு அள­வி­லான வெள்­ள­நீ­ரில் குழந்­தை­களை வீடு

­க­ளி­லி­ருந்து மீட்ட காட்­சி­க­ளைக் காட்­டும் படங்­களை அதி­கா­ரி­கள் நேற்று வெளி­யிட்­ட­னர்.

ஜிமே­னெஸ், டுடேலா நக­ரங்­களில் வெள்­ளத்­தில் மூழ்கி நால்­வர் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­

பட்­டது.

இதற்­கி­டையே, பலத்த காற்று, பேர­லை­கள் கார­ண­மாக கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று பிலிப்­பீன்ஸ் கடற்­பகு­தி­யில் மீன்­பி­டிப் படகு ஒன்று மூழ்­கி­ய­தாக கட­லோ­ரக் காவல்­படை கூறி­யது. பட­கில் இருந்த இரு­வர் மாண்­ட­தா­க­வும் ஆறு பேர் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

லிப்­ம­னான், டினாம்­பாக் நக­ரங்­க­ளி­லும் இரண்டு பேர் வெள்­ளத்­தில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர். அவர்­களில் ஒரு பெண் குழந்­தை­யும் அடங்­கும்.

இந்­நி­லை­யில், காணா­மல் போன­வர்­களில் பலர் கட­லில் மீன்­

பி­டிக்­கச் சென்­ற­வர்­கள் என்று அறி­யப்­ப­டு­கிறது. கன­மழை, பலத்த காற்று கார­ண­மாக கடல்

கொந்­த­ளிப்­பாக இருந்­த­தா­க­வும் அவர்­கள் கட­லில் விழுந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அஞ்­சப்­ப­டு­கிறது.