பனிப்புயல் கோரத் தாண்டவம்; நிலைகுலைந்தது அமெரிக்கா

பனிப்புயல் கோரத் தாண்டவம்; நிலைகுலைந்தது அமெரிக்கா

3 mins read
f4157c37-3b87-4306-a1f0-f26f812a3b66
-

அமெ­ரிக்­காவை உலுக்­கி­வ­ரும் பனிப்­பு­யல், குறைந்­தது 38 பேரின் உயி­ரைப் பறித்­து­விட்­டது. கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு விடு­மு­றைக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருந்த அமெ­ரிக்­கர்­க­ளைத் தற்­போது கடுங்­கு­ளிர், பலத்த காற்று ஆகி­யவை அச்­சத்­தில் உறைய வைத்­துள்­ளன.

மோச­மான வானிலை கார­ண­மாக அமெ­ரிக்­கா­வின் கிழக்­குப் பகு­தி­யில் இருக்­கும் மில்­லி­யன் கணக்­கான அமெ­ரிக்­கர்­க­ளின் இயல்­பு­நிலை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

"சாலை­கள் போர்க்­க­ளத்­தைப் போல காட்சி அளிக்­கின்­றன. பல வாக­னங்­கள் சேத­ம­டைந்­துள்­ளன. மிக­வும் அதிர்ச்­சி­யாக உள்­ளது," என்று நியூ­யார்க் ஆளு­நர் கேத்தி ஹோச்­சுல் தெரி­வித்­தார்.

அவ­ரது சொந்த ஊரான பஃபல்­லோ­வில் கடு­மை­யான பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டதை அடுத்து, 2.4 மீட்­டர் உய­ர­முள்ள பனிக்­கு­வி­ய­லால் சாலை­கள் மூடப்­பட்­டுள்ளன. அது­மட்­டு­மல்­லாது, பல பகு­தி­களில் மின்­

சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­கெ­னவே தாங்க முடி­யாத குளி­ரால் நடுங்­கும் மக்­க­ளின் நிலை மோச­ம­டைந்­துள்­ளது. மின்­சா­ரம் இல்­லாத கார­ணத்­தால் சூடேற்­றும் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ள­தாக திரு­மதி ஹோச்­சுல் கவலை தெரி­வித்­தார். பாதிக்­கப்­பட்ட இடங்­களில் மக்­கள் அனை­வ­ரும் தங்­கள் வீடு­

க­ளி­லேயே இருக்­கும்­படி அவர் கேட்­டுக்­கொண்­டார்.

நியூ­யார்க்­கின் மேற்­குப் பகுதி யில் உள்ள பஃபல்லோ நக­ரைப் பனிப்­பு­யல் புரட்­டிப் போட்­டதை அடுத்து, அங்கு நெருக்­க­டி­நிலை ஏற்­பட்­டுள்­ளது. சாலை­கள் சேதம் அடைந்­துள்­ள­தால் அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்ள இடங்­களை அவ­ச­ர­கா­லச் சேவை அதி­காரி

களால் சென்­ற­டைய முடி­ய­வில்லை.

பொது­வாக கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு விடு­மு­றை­யின்­போது அமெ­ரிக்­கர்­கள் பலர் வெளி­நா­டு­க­ளுக்கு அல்­லது உள்­ளூ­ரி­லேயே பய­ணம் மேற்­கொள்­வர். ஆனால் இம்­முறை பனிப்­பு­யல் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்­டோர் தங்­கள் பய­ணத் திட்­டங்

களைக் கைவிட்­டுள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வில் பல விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. பல சாலை­களும் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் உள்­ளன.

கடந்த ஐந்து நாள்­க­ளாக இடை­வி­டாது தாண்­ட­வம் ஆடும் பனிப்­பு­ய­லின் சீற்றம் குறை­வ­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த வார­

இ­று­தி­யில் அமெ­ரிக்­கா­வின் 48 மாநி­லங்­களில் வெப்­ப­நிலை நினைத்­துப் பார்க்­காத அள­வுக்­குக் குறைந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, பஃபல்லோ நக­ரில் மீட்­புப் பணி­கள் முடுக்கி

விடப்­பட்­டுள்­ளன. இருப்­பி­னும், மீட்­புப் பணி­யா­ளர்­க­ளுக்கே உதவி தேவைப்­படும் நிலை ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பனிப்­பு­யல் கார­ண­மாக மீட்­புப் பணி­யா­ளர்­க­ளால் அவர்­க­ளது வாக­னங்­க­ளி­லி­ருந்து இறங்க முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் உதவி தேவைப்­பட்டு அவ­ச­ரச் சேவைப் பிரிவை அழைத்த பல­ருக்கு உதவி

சென்­ற­டை­ய­வில்லை. இதற்­கி­டையே கடந்த சனிக்­கி­ழமை இரவு, ஆட­வர் ஒரு­வர் தமது நான்கு சிறு பிள்ளைகளு­டன் காரில் சிக்­கிக்­கொண்­டார்.

காவல்­து­றை­யி­ன­ரை­யும் மீட்­புப் படை­யி­ன­ரை­யும் அவர் மாறி­மாறி பல­முறை அழைத்­தும் பல­னில்­லா­மல் போனது.

கிறிஸ்­து­மஸ் தினத்­துக்கு முதல் நாளன்று கிட்­டத்­தட்ட 11 மணி நேரத்­துக்கு திரு ஸிலா சான்­டி­யா­கோ­வும் அவ­ரது பிள்­ளை­களும் காருக்­குள், இரு­ளில் முடங்­கிக் கிடந்­த­னர்.

பனிப்­பு­யல் வீசும் நேரத்­தில் வாக­னம் ஓட்ட தடை விதிக்­கப்­பட்­டும் வேறு வழி­யின்று வாக­னம் ஓட்ட வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக அந்த ஆட­வர் தெரி­வித்­தார்.

குழந்­தை பரா­ம­ரிப்­பா­ள­ரி­டம் தமது பிள்­ளை­களை விட்­டுச் செல்ல தமக்­குப் போது­மான பணம் இல்­லா­த­தால் அவர்­களை வீட்­டிற்கு அழைத்­துச் செல்ல அவ்­வாறு செய்­த­தாக அவர் அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார். இதற்கு முன்பு பல புயல்­க­ளைப் பார்த்­தி­ருப்­ப­தா­கக் கூறிய திரு சான்­டி­யாகோ, இதுபோன்ற மிக மோச­மான பனிப்­பு­ய­லைத் தமது வாழ்­நா­ளில் இது­வரை கண்­ட­தில்லை என்று தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க நேரப்­படி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 5 மணி அள­வில் திரு சான்­டி­யா­கோ­வும் அவ­ரது பிள்­ளை­களும்

மீட்­கப்­பட்­ட­னர்.