கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு சிங்கப்பூரில் தடுப்பூசி
தயாரிக்கும் ஆலை ஒன்றுகூட இல்லை.
ஆனால் சிங்கப்பூரில் தடுப்பூசி தயாரிக்கும் ஆலைகளை அமைக்கப் போவதாக கடந்த இரண்டு
ஆண்டுகளில் ஐந்து மருந்து
தயாரிப்பு நிறுவனங்கள் கடப்பாடு தெரிவித்துள்ளன.
தெர்மோ ஃபிஷர் சைன்டிஃபிக், பயோஎன்டெக், சனோஃபி, ஹில்லிமன் லெபோரட்டொரிஸ், எம்எஸ்டி அல்லது மெர்க் அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளைத் தொடங்குகின்றன.
அந்த ஆலைகளில் ஒவ்வோர் ஆண்டும் பில்லியன் கணக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தி லிருந்து வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளிலிருந்து ஆக அண்மைய தடுப்பூசிகள் வரை ஆலைகளில் தயாரிக்கப்படும்.
கொவிட்-19 நெருக்கடிநிலை கற்றுத் தந்த பாடங்கள் தடுப்பூசி தயாரிப்பு ஆலைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைத்துள்ளன.
எனவே, அவற்றை அமைக்க திடீரென்று பெருமளவிலான முதலீட்டுத் தொகைகள் குவிந்துள்ளன.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது தடுப்பூசிகளைத்
தயாரித்த நாடுகள் அவற்றின் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே எஞ்சியிருந்த தடுப்பூசிகளைப் பிற நாடுகளுக்கு அனுப்பி வைத்தன.
எனவே, சிங்கப்பூருக்குத் தேவையான தடுப்பூசிகளைத்
தயாரிக்க இந்த ஆலைகள் அமைக்கப்படுகின்றன.
இனி கிருமித்தொற்று
நெருக்கடிநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தென்கிழக்காசியாவுக்கு உதவும் வகையில் இந்தத் தடுப்பூசி தயாரிப்பு ஆலையை அமைப்பதாக அது கூறியது.
"தொற்றுநோய்களை எதிர்கொள்ள கட்டுப்படியான விலையிலான தடுப்பூசிகளைத் தயாரிக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில் தென்கிழக்காசியாவிலும் மற்ற நாடுகளிலும் கால் பதிக்க ஹில்லிமன் லொபோரட்டொரிசுக்கு சிங்கப்பூர் முக்கியமான தளமாக உள்ளது," என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி
டாக்டர் ராமன் ராவ் கூறினார்.

