கொவிட்-19 பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பதை ஒத்திகைமூலம் உறுதிசெய்த இந்தியா

கொவிட்-19 பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பதை ஒத்திகைமூலம் உறுதிசெய்த இந்தியா

2 mins read
3384b83d-3415-4a9d-8318-ec1b92713f19
-

சீனா, ஜப்­பான் போன்ற நாடு­களில் கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தை­ய­டுத்து, இந்­தி­யா­வி­லும் அது­போன்­ற­தொரு நிலை ஏற்­பட்­டால் அதனை எதிர்­கொள்ள தயா­ராக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளும் வகை­யில் நேற்று அங்கு நாடு முழு­வ­தும் பொது, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் ஒத்­திகை இடம்­பெற்­றது.

அதன்­படி, மருத்­து­வ­ம­னை­களில் படுக்கை வசதி, உயிர்­வாயு விநி­யோ­கம், மருந்து மாத்­திரை இருப்பு, மனி­த­வ­ளம் உள்­ளிட்ட அனைத்து வச­தி­களும் போதிய அள­வில் உள்­ள­னவா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா டெல்லி சஃப்தர்­ஜங் மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்று, அங்கு இடம்­பெற்ற கொவிட்-19 ஆயத்­த­நிலை ஒத்­தி­கை­யைப் பார்­வை­யிட்­டார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "கவ­ன­மா­கச் செயல்­பட்டு நாட்­டில் கொவிட்-19 தொற்று அதி­க­ரிக்­கா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறு பிர­த­மர் மோடி அறி­வு­றுத்­தி­யுள்­ளார். ஒரு­வேளை மீண்­டும் கொரோனா பர­வத் தொடங்­கி­னால் அதனை எதிர்­கொள்­ள­வும் அர­சாங்­கம் தயா­ராகி வரு­கிறது. மக்­க­ளுக்கு முறை­யான சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்த நாட்­டி­லுள்ள கொவிட்-19 சிகிச்சை மையங்­களில் இன்­றைய ஒத்­திகை இடம்­பெ­று­கிறது," என்­றார்.

மாநி­லங்­களில் இடம்­பெற்ற ஒத்தி­கை­யில் அந்­தந்த மாநி­லங்­களின் சுகா­தார அமைச்­சர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அவ்­வ­கை­யில், தமி­ழக மருத்­துவ, மக்கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­மனை­யில் ஒத்­திகையைத் தொடங்­கி­வைத்­தார்.

அனைத்து மருத்­து­வக் கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் தயார்­நி­லை­யில் வைத்­தி­ருக்­கு­மாறு அவர் அறி­வு­றுத்­தி­னார். அத்­து­டன், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், மருத்­துவ வச­தி­கள் போன்ற விவ­ரங்­கள் அடங்­கிய அறிக்­கையை அனைத்து மருத்­து­வ­ம­னை­களும் 24 மணி நேரத்­திற்­குள் தாக்­கல் செய்­ய­வும் அவர் உத்­த­ர­விட்­டார்.

இதனிடையே, நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 157 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக இந்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது.