சீனாவில் கடும் மூடுபனி; 200 வாகனங்கள் விபத்தில் சிக்கின

சீனாவில் கடும் மூடுபனி; 200 வாகனங்கள் விபத்தில் சிக்கின

2 mins read
a76dae85-5b17-4953-8b16-8d072e801cab
-

கடு­மை­யான மூடு­பனி கார­ண­மாக சீனா­வின் ஹினான் மாநி­லம், ஸெங்ஸோ நக­ரில் பாலம் ஒன்­றில் நேற்று காலை ஏற்­பட்ட பெரிய விபத்­தில் பலநூறு வாக­னங்­கள் சிக்­கிக்­கொண்­டன.

சம்­பவ இடத்­தில் இருந்த மீட்­புப் பணி­யா­ளர்­க­ளின் முன்­னோட்ட கணிப்­பின்­படி, 200க்கும் அதி­க­மான வாக­னங்­கள் விபத்­தில் சிக்­கின.

ஸெங்­ஸின் ஹுவாங்ஹெ பாலத்­தில் ஏற்­பட்ட அந்த விபத்­தில் பல கார்­களும் டிரக் வாக­னங்­களும் ஒன்­றின்­மேல் ஒன்­றாக ஏறி நின்­றன.

இந்த விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் பலர் காய­ம­டைந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் காயம் அடைந்­த­வர்களின் எண்ணிக்கை விவரம் தெரி­யவில்லை. அவர்கள் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­ட­னர்.

காய­ம­டைந்­த­வர்­களில் பலர் தங்­க­ளது வாக­னங்­களில் சிக்­கிக்கொண்­ட­னர்.

தீய­ணைப்­புத் துறை­யி­னர் பாலத்தில் அவர்களை மீட்க உதவியதை அர­சாங்க ஊட­க­மான சிசி­டி­வி­யின் காணொளி காட்­டி­யது.

விபத்து நிகழ்ந்த இடத்­துக்கு 11 தீய­ணைப்பு வாக­னங்­களும் 66 தீய­ணைப்பு, மீட்­புப் பணி­யா­ளர்­களும் அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

மூடு­பனி கார­ண­மாக மேம்­பா­லத்­தைக் கடக்க அனைத்து வாக­னங்­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக உள்­ளூர் போக்கு ­வ­ரத்து காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஸெங்­ஸோ­வின் பல இடங்­களில் 500 மீட்­டர் தொலை­வுக்கு மேல் எதை­யும் பார்க்க முடி­ய­வில்லை என்­றும் சில நேரங்­களில் 200 மீட்­டர் தூரத்­துக்கு அப்­பாற்­பட்டு எது­வும் தெரி­ய­வில்லை என்றும் அந்த நக­ரத்­தின் வானிலை ஆய்­வுத் துறை தெரி­வித்­தது.

விபத்து நிகழ்ந்த பகு­தி­யைப் படம் எடுத்த ஓட்­டு­நர் ஒரு­வர், "இது மிக­வும் பயங்­க­ர­மாக உள்­ளது. இங்கு மக்­கள் கூட்­டம் நிரம்பி வழி­கிறது. பாலத்­தி­லி­ருந்து நாங்­கள் வெளி­யேற முடி­யும் என்று எனக்கு தோன்­ற­வில்லை," என்­றார்.

ஸெங்­ஸின் ஹுவாங்ஹெ பாலம், மஞ்சள் ஆற்றைக் கடப்பதற்கான அப்பகுதி யின் முக்கிய பாலம் ஆகும்.