சீனாவில் கொவிட்-19 அதிகரிப்பு; சிங்கப்பூரில் பயண நடைமுறைகள் சீனப் பயணிகளுக்கான விதிமுறைகளில் மாற்றமில்லை

சீனாவில் கொவிட்-19 அதிகரிப்பு; சிங்கப்பூரில் பயண நடைமுறைகள் சீனப் பயணிகளுக்கான விதிமுறைகளில் மாற்றமில்லை

2 mins read

சீனா அதன் எல்­லை­களை வரும் ஜன­வரி 8ஆம் தேதி திறக்­க­வுள்ள வேளை­யில் சிங்­கப்­பூர் சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கான தற்­போ­தைய விதி­மு­றை­களில் மாற்­ற­மில்லை என்று சிங்­கப்­பூர் கூறி­யுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் வரை­ய­றைப்­படி முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பய­ணி­கள் தங்­கள் பய­ணத்­துக்கு முன்­னர் கிரு­மிப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

அது குறித்த ஊட­கங்­கள் விடுத்த கேள்­வி­க­ளுக்கு சுகா­தார அமைச்சு நேற்று பதில் அளித்­தது.

குறு­கிய காலத்­துக்கு இங்கு வரு­வோர், கொவிட்-19 மருத்­து­வச் செல­வு­களை ஈடு­கட்­டும் காப்­பு­று­தியை வாங்க வேண்­டும்.

இந்­தக் கட்­டத்­தில் சீனா­வி­லி­ருந்து வரும் பய­ணி­கள், வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­கான தற்­போ­தைய எல்லை தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளி­லும் தடுப்­பூசி விதி­மு­றை­க­ளி­லும் மாற்­ற­மில்லை என்று அமைச்சு கூறி­யது.

அனைத்­து­லக கொவிட்-19 நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் தேவைப்­பட்­டால் எல்லை தொடர்­பான சுகா­தார நட­வ­டிக்­கை­க­ளைத் தகுந்­த­வாறு தான் மாற்­றப்­போ­வ­தா­க­வும் அமைச்சு சொன்­னது.

சீனா நேற்று முன்­தி­னம் அதன் எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை அகற்­றி­யதை அடுத்து, சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான பயண முன்­ப­திவு பல மடங்கு உயர்ந்­தி­ருக்­கிறது.

வெளி­நாடு செல்­லத் திட்­ட­மி­டு­ப­வர்­களில் பலர் சிங்­கப்­பூர் வர முன்­ப­திவு செய்­தி­ருப்­ப­தாக ட்ரிப்.காம் இணை­யத்­த­ளம் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறின.

தென் கொரியா, தாய்­லாந்து, ஜப்­பான் போன்ற நாடு­க­ளுக்­கும் பயண முன்­ப­திவு கூடி­யுள்­ளது.

மற்ற நாடு­களில் கட்­டுப்­பா­டு­கள்

சீனா­வி­லி­ருந்து வரும் பயணி களின் எண்­ணிக்கை அடுத்­தாண்டு மிக­வும் கூடும் என்ற எதிர்­பார்ப்­பில் பல்­வேறு நாடு­கள், சீனப் பய­ணி­க­ளுக்­குக் கட்­டுப்­பா­டு­களை அறி­வித்து வரு­கின்­றன அல்­லது அது குறித்து பரி­சீ­லித்து வரு­கின்­றன.

சீனா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று மிக­வும் கூடி­யுள்­ள­தால் நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்க அங்­குள்ள மருத்­து­வ­ம­னை­கள் சிர­மப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால் தொற்று நில­வ­ரம் பற்­றிய மாறு­பட்­டத் தக­வல்­கள் பிற நாடு­களில் கவ­லையை ஏற் படுத்­தி­யுள்­ளன.

இந்­நி­லை­யில் தொற்­றுப் பர­வ­லைத் தடுப்­ப­தற்கு சீனப் பய­ணி­க­ளுக்­குப் புதிய கட்­டுப்­பா­டு­களை விதிப்­பது பற்றி அமெ­ரிக்கா பரி­சீ­லித்து வரு­கிறது.

ஜப்­பா­னுக்­குச் செல்­லும் அனைத்­துச் சீனப் பய­ணி­க­ளுக்­கும் வந்­தி­றங்­கி­ய­தும் அவர்­களுக்கு கொவிட்-19 கிரு­மிப் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்­றும் தொற்­றுள்­ள­வர்­கள் ஏழு நாள்­ களுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் கூறி­யது. இந்­தியா, அனைத்­து­ல­கப் பய­ணி­களில் இரண்டு விழுக்­காட்­டி­ன­ரி­டம் கிரு­மிப் பரி­சோ­த­னை­க­ளைச் சென்ற வாரம் தொடங்­கி­யது.

இந்­நி­லை­யில் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, சீனச் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளால் தொற்று அதி­க­ரிக்­கும் வாய்ப்­பைப் பற்றி பயப்­ப­ட­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார். தாய்­லாந்து, சீன நாட்­ட­வரை ஈர்க்­கும் நோக்­கில் சுற்­றுப்­ப­ய­ணத் திட்­டங்­க­ளைத் திருத்தி வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளது.

இந்­தியா செல்­லும் சிங்­கப்­பூர் பய­ணி­க­ளுக்கு கட்­டா­யக் கிரு­மிப் பரி­சோ­தனை இல்லை

- செய்தி பக்­கம் 2ல்