தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சந்திரபாபு நாயுடு தலைமையிலான பேரணியில் கூட்ட நெரிசல்: எண்மர் பலியான அவலம்

2 mins read
1f5b286e-4a7e-40a0-9b85-ea70ceba393e
-
multi-img1 of 2

ஆந்­திர மாநி­லம் நெல்­லூர் அருகே தெலுங்கு தேசம் கட்­சித் தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு தலை­மை­யில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் ஏற்­பட்ட கூட்ட நெரி­ச­லில் சிக்கி எட்டு பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

ஆந்­தி­ரா­வின் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தெலுங்கு தேசம் கட்சி உள்­ளது. முன்­னாள் முதல்­வ­ரான சந்­தி­ர­பாபு நாயுடு இக்­கட்­சி­யின் தலை­வ­ராக உள்­ளார்.

நெல்­லூர் மாவட்­டம் கந்­து­கூர் என்ற இடத்­தில் தெலுங்கு தேச கட்­சிப் பொதுக்­கூட்­டம் நடந்­த­போது அங்கு மாவட்­டம் முழு­வ­தி­லும் இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் திரண்­டி­ருந்­த­னர்.

சந்­தி­ர­பாபு நாயுடு வாக­னம் ஒன்­றின் மேல் நின்­ற­வாறு பேசிக்­கொண்­டி­ருந்­தார்.

கூட்­டம் முடிந்த நிலை­யில் அதில் பங்­கேற்ற பொது­மக்­கள் அங்­கி­ருந்து வேக­மாக வெளி­யே­றத் தொடங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆர்வ மிகு­தி­யில் தொண்­டர்­கள் சிலர் சந்­தி­ர­பாபு நாயுடு இருந்த வாக­னத்­தின் அரு­கில் செல்ல முயன்­ற­தால் கூட்­டத்­தி­ன­ரி­டையே முட்டி மோது­தல் ஏற்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் ஏற்­பட்ட கூட்­ட­நெ­ரி­சலில் சிக்கி கால்­வா­யில் விழுந்த 8 பேர் மாண்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

பலர் காய­ம­டைந்­துள்­ள­தா­க­வும் இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. காய­ம­டைந்­தோர் நெல்­லூர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் ஐவ­ரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, சம்­ப­வம் எவ்­வாறு நேர்ந்­தது என்­பது குறித்து விசா­ரணை நடந்து வரு­கிறது.

நடந்த சம்­ப­வம் குறித்து தமது அனு­தா­பத்­தை­யும் வேத­னை­யை­யும் தெரி­வித்த சந்­தி­ர­பாபு நாயுடு, பலி­யா­னோ­ரின் குடும்­பத்­திற்­குத் தலா ரூ.10 லட்­சம் நிவா­ர­ண­மாக வழங்­கப்­படும் என அறி­வித்­துள்­ளார்.

அத்­து­டன் அவர்­க­ளின் குழந்­தை­க­ளின் கல்­விச் செல­வு­களை ஏற்­ப­தா­க­வும் அவர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

தற்­போது ஆளும் ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்சி முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்­டிக்கு எதி­ராக தீவிர அர­சி­யல் செய்து வரு­கி­றார் சந்­தி­ர­பாபு நாயுடு. மீண்­டும் ஆந்­தி­ரா­வில் ஆட்சி அமைக்க வேண்­டும் என்­ப­தற்­காக தொடர்ந்து பேரணி, ஆர்ப்­பாட்­டம், பொதுக்­கூட்­டம் என அதி­ர­டி­யாக இறங்­கி­யுள்­ளார் அவர்.

இதற்­கி­டையே, இந்த அசம்­பாவிதம் அவ­ருக்­குப் பின்­ன­டை­வாக அமை­ய­லாம் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.