மலேசியாவுக்குள் நுழையும் எல்லாருக்கும் பரிசோதனை

மலேசியாவுக்குள் நுழையும் எல்லாருக்கும் பரிசோதனை

3 mins read

மலே­சி­யா­வுக்­குச் செல்­லும் அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கும் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அணு­கு­முறை ஜன­வரி 8ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

மலே­சி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு மீண்­டும் தலை­தூக்

காமல் இருக்க தனது அனைத்­து­லக விமான நிலை­யங்­கள், நிலம்­வழி சோத­னைச்­சா­வ­டி­கள் ஆகி­ய­வற்­றில் கண்­கா­ணிப்­பு நடவடிக்கைகளை மலே­சியா முடுக்­கி­வி­டு­கிறது.

சீனா­வில் கொவிட்-19 கிருமித்­ தொற்­றால் பாதிக்­கப்­பட்

டோரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து, அங்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அங்­கி­ருந்து வரும் விமா­னங்­களில் உள்ள கழி­வு­நீர் சோதிக்­கப்­படும் என்று மலே­சிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

விமா­னத்­தில் உள்ள கழி­வு­நீர் தேசிய பொதுச் சுகா­தார

ஆய்­வுக்­கூ­டத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்டு 'பொலி­ம­ரேஸ் செயின் ரியாக்­‌ஷன்' முறைப்­படி சோதிக்­கப்­படும். அதன்­மூ­லம் விமா­னத்­தில் இருந்த பயணி

களுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உள்­ளதா என்று

தெரிந்­து­வி­டும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

"சீனா உட்­பட, வெளி­நாடு

களி­லி­ருந்து மலே­சி­யா­வுக்கு வரும் பய­ணி­க­ளுக்­குக் காய்ச்­சல் இருக்­கி­றதா என்று கண்­டு­பி­டிக்க அனைத்­துப் பய­ணி­க­ளுக்­கும் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

காய்ச்­சல் அல்­லது அதற்­கான அறி­கு­றி­க­ளு­டன் இருக்­கும்

பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தும் நிலை­யத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்

படு­வர். அங்கு அவர்­க­ளுக்கு மீண்­டும் பரி­சோ­தனை நடத்­தப்­படும். சந்­தே­கம் எழுந்­தால் அவர்

களுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­படும்," என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஸலிஹா முஸ்­தஃபா நேற்று தெரி­வித்­தார்.

"புதிய உரு­மா­றிய கொவிட்-19 வகை, அனைத்து வகை சளிக்­காய்ச்­சல், கடு­மை­யான சுவா­சத் தொற்று ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரைக் கண்­டு­பி­டிக்­கும் முறையை மேம்­ப­டுத்த கடந்த 14 நாள்­களில் சீனா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­வர்­கள் அல்­லது அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­ட­பில் இருந்­தோ­ருக்கு ஆண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். கொவிட்-19 பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டால் ஜெனோம் சீக்குவன்சிங் எனப்படும் முழு மரபணு வடிவமைப்பை கண்டறியும் பரிசோதனை நடத்­தப்­படும்.

கொவிட்-19 அறவே இல்­லாத நிலையை இலக்­கா­கக் கொண்­டி­ருந்த சீனா அண்­மை­யில் அதன் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யது.

இதை­ய­டுத்து, அங்கு கிரு­மிப் பர­வல் மோசமடைந்து பலர் நோய்­வாய்ப்­பட்­ட­னர். நீண்­ட­கா­ல­மாக முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­லும் இன்­னும் பலர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­தா­லும் சீனா­வில் பல­ருக்கு எதிர்ப்­புச் சக்தி குறை­வாக இருப்­ப­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இத­னால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக அங்கு மரண எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 11ஆம் தேதியி

லிருந்து 17ஆம் தேதி­வரை சீனா­வில் புதி­தாக 148,659 பேருக்­குப் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் மேலும் 442 பேர் மாண்­ட­தா­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னம் வழங்­கிய அதி­கார

பூர்­வத் தர­வு­களை அடிப்­படை

யாகக் கொண்டு மலே­சிய சுகா­தார அமைச்சு கூறி­யது.

இதன் விளை­வாக சீனா­வி­லி­ருந்து வரும் விமா­னங்­கள் கூடு­தல் கட்­டுப்­பா­டு­க­ளுக்­கும் சோத­னை­க­ளுக்­கும் உட்­படுத்தப்படும் என்று மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தனது அனைத்­து­லக எல்­லை­களை மீண்­டும் திறக்க சீனா முடி­வெ­டுத்­த­தைத் தொடர்ந்து, அங்­கி­ருந்து மலே­சி­யா­வுக்கு வரும் விமா­னங்­கள் அதி­க­ரிக்­கும் என்று மலே­சி­யப் போக்கு

வரத்து அமைச்­சர் ஆண்­டனி லோக் நேற்று தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, சீனா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரும் நிலை­யில், அதன் விளை­வாக உல­கெங்­கும் பல இடங்­க­ளி­லும் கூடு­தல் கண்­கா­ணிப்­பு நடவடிக்கைகள் மற்­றும் சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கிறது.

இதற்கு சீனா அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யுள்­ளது.

உலக நாடு­க­ளின் இச்­செ­யல் சீனா­வுக்கு எதி­ரான பார­பட்­ச­மிக்­கது என்று சீன அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கம் சாடி­யுள்­ளது. கொவிட்-19 பாதிப்பு குறித்த உண்மை நில­வ­ரம் தொடர்­பாக சீனா போது­மான தக­வல்­களை வெளி­யி­டா­த­தால் உலக நாடு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள நட­வ­டிக்­கை­கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யவை என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.