இந்திய கிரிக்கெட் குழுவின் விக்கெட் காப்பாளரும் பந்தடிப்பாளருமான ரிஷப் பன்ட் நேற்று காலை சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த விபத்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கீ நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் நிகழ்ந்தது.
ரிஷப் பன்ட் ஓட்டிச் சென்ற மெர்சடிஸ் பென்ஸ் கார், சாலை தடுப்பின் மீது மோதி தீப்பிடித்துகொண்டதாக தி இந்து நாளி
தழிடம் ஹரிதுவார் நகரின் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் அஜெய் சிங் தெரிவித்தார். பன்ட்டின் தலையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டன. ரிஷப் பன்ட் முதலில் ரூர்கீ நகரில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு அவர் டேராடுன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உத்தராகண்ட் மாநில முதல்வர்
அலுவலகம் தெரிவித்தது.
ரிஷப் பன்ட் தமது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் கட்டுப்பாடு இழந்து சாலைத் தடுப்பு மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது. ஆனால் சம்பவம் நிகழ்ந்தபோது அந்த நெடுஞ்
சாலையில் மூடுபனி அதிகமாக இருந்ததாக சிலர் கூறினர். சம்பவம் நிகழ்ந்தபோது ரிஷப் பன்ட் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் டெல்லியிலிருந்து ரூர்கீயில் உள்ள தமது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“ரிஷப் பன்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கார் சாலைத் தடுப்பின் மீது மோதியதால் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அவரால் சுயமாகவே காரிலிருந்து வெளியேற முடிந்தது. சம்பவ இடத்தில் இருந்த சில வழிப்போக்கர்கள் அவருக்கு உதவினர். தகவல் கிடைத்ததும் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்தது. விபத்து நிகழந்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்துக்கொண்டது,” என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் அஜெய் சிங் தெரிவித்தார்.