ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஒன்றுபடுவோம்

ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஒன்றுபடுவோம்

3 mins read
ef52aab5-2864-4529-8f41-15984e7a0682
-

புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் லீ: துணிவு உள்ளோருக்கே இருளிலும் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படும்

புத்­தாண்­டில் கூடு­த­லான சோத­னைத் தரு­ணங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­று­பட்டு வாய்ப்­பு­களைப் பற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யி­ருக்­கி­றார்.

மிக மோச­மான சூழ்­நி­லை­களி­லும் நம்­பிக்கை ஒளிக்­கீற்று தென்­ப­டு­வ­துண்டு. ஆனால், அது வாய்ப்­பு­க­ளைப் பற்­றிக்­கொள்­ளும் துணி­வு­டை­யோ­ருக்கு மட்­டுமே தென்­படும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் கிரு­மிப் பர­வலைப் பாது­காப்­பா­கக் கடந்­து­வந்து, மேலும் வலி­மை­யு­டன் மீண்­டெ­ழுந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 அணு­கு­முறை, உலக அரங்­கில் நாட்­டிற்கு நன்­ம­திப்­பை­யும் நற்­பெ­ய­ரை­யும் மெரு­கேற்­றி­யுள்­ளது என்­றார் அவர். பிர­த­மர் லீ நாட்டு மக்­களுக்கு விடுத்த புத்­தாண்­டுச் செய்­தி­யில் இவ்­வாறு குறிப்­பிட்டுள்­ளார்.

கூடு­த­லான நிறு­வ­னங்­களும் தனி­ந­பர்­களும் சிங்­கப்­பூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் தொழில் தொடங்க விரும்­பும் நிலை­யில், சிங்­கப்­பூர்­ மீது அதிக ஆர்­வம் காட்­டப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"இந்த வாய்ப்­பைப் பயன்­படுத்­திக்­கொண்டு நம்­பிக்கை அளிக்­கும் முத­லீ­டு­க­ளை­யும் திறன்­மிக்க வெளி­நாட்­டி­ன­ரை­யும் சிங்­கப்­பூ­ருக்கு வர­வேற்­கும் அதே­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரர்­களின் திறன்­க­ளை­யும் ஆற்­றல்­க­ளை­யும் மேம்­ப­டுத்­திக்­கொள்ள­வேண்­டும். வட்­டா­ரம், உல­கம் எனப் புதிய இடங்­களை நாடிச் சென்று நமது கன­வு­களை நன­வாக்­க­வேண்­டும்," என்று பிர­த­மர் கூறி­யுள்­ளார்.

2022ஆம் ஆண்­டில் நாம் நன்றி ­செ­லுத்த நிறைய தரு­ணங்­கள் இருந்­தன. கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான ஈராண்­டுப் போராட்­டத்­தின் பிறகு வழக்­க­நிலை திரும்­பத் தொடங்­கி­யது, கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­னர் முழு­மை­யான தேசிய தின அணி­வ­குப்பை நடத்­தி­யது, சிங்­கப்­பூ­ரர்­கள் மீண்­டும் பண்­டி­கை­க­ளைக் கொண்­டா­ட­வும் குடும்­பத்­து­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் உள்­ளூ­ரி­லும் வெளி­யூ­ரி­லும் ஒன்­றி­ணை­ய­வும் சாத்­தி­ய­மா­னது போன்­ற­வற்­றைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

அண்­மை­யில் மேற்­கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணங்களின்போது சாங்கி விமான நிலை­யம் உயி­ரோட்­டத்­து­டன் செயல்­ப­டு­வதைக் கண்டு மகிழ்ந்­த­தா­கக் கூறிய அவர், சிங்­கப்­பூ­ரின் மீட்சி விமான நிலை­யம், விமான நிறு­வனம் ஆகி­ய­வற்­றோடு ஹோட்­டல்­கள், கடை­கள், உணவு பானத் துறை, சேவைத் துறை ஆகி­ய­வற்­றுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

"ஷங்­ரிலா உரை­யா­டல், புளூம்­பெர்க் புதிய பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு, "எஃப்1" இரவு நேரக் கார்ப் பந்­த­யம் உள்­ளிட்ட நேரடி நிகழ்ச்­சி­கள் சிங்­கப்­பூர் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­விட்­டதை உல­குக்கு உணர்த்­தி­யுள்­ளன. இருப்­பி­னும் அனை­வ­ரும் இரு­தி­றன் கொண்ட தடுப்­பூ­சி­களைப் போட்­டுக்­கொள்­வதை வலு­வாக ஊக்­கு­விக்­கி­றேன்," என்­றார் திரு லீ.

அனைத்­து­ல­கப் பய­ணங்­களும் சீனா­வில் பாதிப்­பும் உய­ரும்­வே­ளை­யில், நில­வ­ரத்தை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து பின்­னர் இறு­திக்­கட்­ட­மாக எஞ்சியுள்ள கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்­றார் அவர்.

ரஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான போர் தொடர்­கிறது. அமெ­ரிக்­கா­விற்­கும் சீனா­விற்­கும் இடை­யி­லான பதற்­றம் தணிந்­த­பா­டில்லை.

இந்­நி­லை­யில் நிச்­ச­ய­மற்­ற­தன்­மையை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தயா­ராக இருக்­க­வேண்­டும் என்­றார் திரு லீ.

வர்த்­தக, தொழில் அமைச்சு அடுத்த ஆண்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி 0.5 விழுக்­காடு முதல் 2.5 விழுக்­கா­டாக மட்­டுமே இருக்­கும் என்று முன்­னு­ரைத்­துள்­ளதை அவர் சுட்­டி­னார்.

பொருள், சேவை வரி உயர்­வின் தாக்­கத்­தைக் குறைக்க அர­சாங்­கம் உத­வு­கிறது. சென்ற மாதம் ஏறக்­கு­றைய மூன்று மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­களுக்கு $700 ரொக்­கம் வழங்­கப்­பட்­ட­தைக் குறிப்­பிட்ட அவர் உத­வி­கள் தொட­ரும் என்­றார்.இந்த வரி உயர்­வின் மூலம் கிடைக்­கும் தொகை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்புக்கு செல­வி­டப்­ப­டு­மென்­றார் திரு லீ.

வீட­மைப்பு, குற்­ற­வி­யல் சட்­டத்­தின் 377ஏ பிரிவை அகற்­றி­யது உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்­தும் பேசிய அவர், ஒன்­றி­ணைந்து சிங்­கப்­பூ­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ருக்­கும் மேலும் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தை உரு­வாக்க முடி­யும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

புத்தாண்டு வாழ்த்துகள்

பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்முரசு இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.