அதிபர்: புது கட்டத்தில் சீனா

அதிபர்: புது கட்டத்தில் சீனா

3 mins read

கொவிட்-19 நிலவரம் பற்றி ஸி ஜின்பிங்: கடும் சவால்கள் காத்திருப்பதாக எச்சரிக்கை

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் சீனா புதிய கட்டத்­தில் நுழைந்து இருக்­கிறது என்று அந்த நாட்­டின் அதி­பர் ஸி ஜின்­பிங் தெரி­வித்திருக்­கி­றார்.

கடு­மை­யான சவால்­களை எதிர்­நோக்கி இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்டுள்­ளார்.

சீனா கொரோனா கிரு­மியை அடி­யோடு துடைத்­தொழிக்க வேண்­டும் என்ற கொள்­கை­யைக் கடைப்­பி­டித்து வந்­தது.

ஆனால், இப்­போது அந்­தக் கொள்­கையை அது கைவிட்டு இருக்­கிறது. இதன் கார­ண­மாக நாட­ளா­விய அள­வில் தொற்று தாறு­மா­றா­கக் கூடி இருக்­கிறது.

அந்த நாட்­டின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்­கும் பொரு ளி­ய­லுக்­கும் பெரும் சோதனை ஏற்­பட்டு உள்­ளது.

இந்த நிலை­யில், முதன்­முதலாக அதி­பர் ஸி, வெளிப்­படை­யாக கருத்­து­களை வெளி­யிட்­டார். "அறி­வி­யலை அடிப்­படை­யா­கக் கொண்ட, குறிப்­பிட்ட இலக்­கு­க­ளு­டன் செயல்­ப­டக்­கூ­டிய அணு­கு­முறையை சீனா கடைப்­பி­டிக்­கிறது. பரி­ண­மித்து வரும் சூழ்­நி­லையைக் கருத்­தில்­கொண்டு கொவிட்-19 கிரு­மியை ஒடுக்க அந்த அணு­கு­முறையை நாங்­கள் கடைப்­பி­டிக்­கி­றோம்.

"இதன்­ மூ­லம் கூடு­மானவரை மக்­க­ளின் உயி­ரை­யும் உடல்­நலனை­யும் காப்­பாற்று­கிறோம்," என்று வரு­டாந்­திர புத்­தாண்டுக்கு முதல் நாள் உரை­யில் அதி­பர் ஸி சனிக்­கிழமை தெரி­வித்­தார்.

சீனா­வில் முற்­றி­லும் கொரோனா கிரு­மியைத் துடைத்­தொ­ழிக்­கும் கொள்கை பற்றி அதி­பர் ஸி வெள்ளிக்­கி­ழமை முதன்­மு­த­லாக கருத்­து­ரைத்­தார். அர­சாங்­கம் கைகொள்ளும் உத்தி, மக்­க­ளின் உயிர்­க­ளைக் காப்­ப­தி­லும் பொருளி­யல் பாதிப்­பு­க­ளைக் கூடு­மா­ன­வரை குறைப்­ப­தி­லும் ஒரு­மித்த கவனம் செலுத்தி வரு­வ­தாக அவர் கூறி­னார்.

சீனா கொரோனா கிரு­மியை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்க வேண்­டும் என்ற கொள்­கையை கடந்த மூன்­றாண்­டு­க­ளா­கக் கடைப்­பி­டித்து வந்­தது.

ஆனால், திடீ­ரென அந்தக் கொள்­கை­யிலிருந்து விலகி­யது. இத­னால் நாட்டில் மளமளவென தொற்று கூடி­விட்­டது.

"அசா­தா­ர­ண­மான முயற்சி­களு­டன் நாங்­கள் இது­வரை எதிர்­நோக்­காத சிர­மங்­க­ளை­யும் சவால்­க­ளை­யும் சமா­ளித்து வரு­கி­றோம். இது எல்­லா­ருக்­குமே எளி­தான ஒன்­றல்ல," என்று அதி­பர் ஸி தெரி­வித்­தார்.

இப்­படி அதி­பர் ஸி கருத்­து­களை வெளி­யிட்டு இருப்­ப­தன் மூலம், சீனா­வில் வேக­மாக கிருமி பர­வு­வ­தன் கார­ண­மா­கவும் பொரு­ளி­யல் முடக்­கங்­களின்­போ­தும் மக்­கள் அனு­பவித்த துய­ரங்­களை அவர் ஏற்­றுக்­கொண்டு இருப்­ப­தாகவும் தெரி­கிறது.

இது அரி­தான ஒன்று என்று கரு­தப்­ப­டு­கிறது. "கொவிட்-19 கிரு­மியைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் நாடு புதிய கட்­டத்தை எட்டு­கிறது. இந்­தச் சூழ்­நி­லையை மக்­கள் பொறு­மை­யு­டன் அமைதி காக்க வேண்­டும்," என்று அதிபர் ஸி அழைப்பு விடுத்­தார்.

"கூடு­த­லாக முயற்­சி­களை மேற்­கொண்டு சிர­மத்­தில் இருந்து மீண்டு வரு­வோம். ஒற்­று­மை­யும் சகிப்­புத்தன்­மை­யும் பொறு­மை­யும் தான் வெற்­றிக்கு வழி," என்று அவர் கூறி­னார்.

நாட்­டின் பொரு­ளி­யல் பற்றி கருத்து கூறிய அதி­பர் ஸி, சீனா வலு­வான வளர்ச்­சியை அனு­பவித்து இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார். சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 120 டிரில்­லி­யன் யுவானை (S$23 டிரில்­லி­யன்) விஞ்­சி­விட்­டது என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

இதைக் கணக்­கிட்­டுப் பார்க்­கை­யில் சீனப் பொரு­ளி­யல் 2022ல் குறைந்­த­பட்­சம் 4.4% வளர்ச்சி கண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வ­ரு­கிறது. சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி கூட்­டம் கடந்த அக்­டோ­ப­ரில் நடந்­தது. அதில் அதி­பர் ஸி மூன்­றா­வது தட­வை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

அத­னால் 2022வது ஆண்டு தனக்குப் பெரும் கொண்­டாட்ட ஆண்­டாக இருக்­கும் என்று அவர் நம்­பி­யி­ருந்­தார்.

என்­றா­லும் ஒரு மாதத்­திற்­குப் பிறகு அவ­ரு­டைய அர­சாங்­கம் கடு­மை­யான சோத­னை­களை எதிர்­நோக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

கொரோ­னா­வுக்கு எதி­ராக அர­சாங்­கம் எடுத்து வரும் பூஜ்ஜியக் கிரு­மிக் கொள்­கையை எதிர்த்து பொது­மக்­கள் கோப­மடைந்து போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

அது பற்றி தன்­னு­டைய புத்­தாண்­டுச் செய்­தி­யில் மறை­மு­க­மாக குறிப்­பிட்ட அதி­பர், 1.4 பில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் நாட்­டில், அவர்­க­ளி­டம் வெவ்வேறான கவ­லை­களும் அக்­க­றை­களும் கருத்­து­களும் நில­வு­வது இயல்­பான ஒன்­று­தான் என்­றார்.

"தக­வல் தொடர்பு, ஒருங் கிணைந்த ஆலோ­சனை மூலம் கருத்து இணக்­கத்தை நாங்­கள் பலப்­படுத்­து­கி­றோம். அது­தான் முக்­கி­யம்," என்­றார் அதி­பர்.