சீனா நாளை எல்லைதிறப்பு; இவ்வட்டாரத்திற்குப் பலன்

3 mins read

மூன்­றாண்டு கால­மாக நடைமுறைப்­ப­டுத்தி வந்த கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை சீனா நாளை (ஜன­வரி 8) தளர்த்­து­வ­தன் மூலம் மற்ற நாடு­க­ளைக் காட்­டி­லும் தென்­கி­ழக்­கா­சிய நாடுகளின் சுற்­றுப்­ப­யண பொரு­ளி­யல் பெரிதும் பலன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அமெ­ரிக்கா, ஜப்­பான் மற்­றும் ஐரோப்­பிய நாடு­கள் சீன சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குக் கட்­டுப்­பாடு விதித்­தி­ருக்­கும் நிலை­யில், தென்­கி­ழக்­கா­சியா மீது அந்­தப் பய­ணி­கள் கவ­னம் செலுத்­தக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

1.4 பில்­லி­யன் மக்­கள்

தொகை­யைக் கொண்ட, உல­கின் இரண்­டா­வது பெரிய பொரு­ளி­யல் நாடான சீனா, புதிய வகை ஓமிக்­ரான் கிரு­மி­யால் சிர­மங்­களை எதிர்­நோக்­கும் வேளை­யி­லும் நாளை முதல் அது தனது எல்­லை­களை அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்­குத் திறந்­து­வி­டு­கிறது.

மூன்­றாண்டு கால­மாக நடப்­பில் இருந்த கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­ப­டு­வது ஏரா­ள­மான பய­ணி­களை ஈர்க்­கும் ஒரு நட­வ­டிக்­கை­யாக பார்க்­கப்­ப­டு­கிறது.

சீனா­வி­லி­ருந்து பல­ரும் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்­குச் செல்­லும் சாத்­தி­யம் ஏற்­பட்டு உள்­ளது. புதி­தாக நட­மா­டத் தொடங்­கும் சீனச் சுற்­றுப் பய­ணி­கள் தொந்­த­ரவு குறைந்த, பரி­சோ­த­னை­க­ளைக் கட்­டா­யப்படுத்­தாத இடங்­க­ளைத் தெரிவு செய்­யக்­கூ­டும் என்­றும் அந்த வகை­யில் தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் அவர்­க­ளின் தெரி­வாக இருக்­கக்­கூ­டும் என்­றும் சிஐ­எம்பி வங்­கி­யின் பொரு­ளி­யல் நிபு­ணர் சோங் செங் வும் தெரி­வித்­துள்­ளார்.

இந்த வட்­டார விமான நிலை­யங்­கள் பய­ணி­க­ளால் நிரம்பி வழி­வது வட்­டார பொரு­ளி­யல் நாடு­க­ளுக்கு நல்­லது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், இந்­தியா, ஜப்­பான், அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் சீனா­வில் இருந்து உள்ளே வரு­வோ­ருக்கு 'கொவிட்-19 தொற்­றில்லை' சான்­றி­த­ழைக் கட்­டா­யப்­ப­டுத்தி உள்­ளன.

அதே­நே­ரம், கம்­போ­டியா தொடங்கி இந்­தோ­னீ­சியா, சிங்­கப்­பூர் வரை­யி­லான தென்­கி­ழக்­கா­சிய நாடு­கள் அது­போன்ற கட்­டுப்­பாட்டை சீனா­வி­லி­ருந்து வரு­வோ­ருக்கு விதிக்­க­வில்லை.

எல்லா நாட்­டி­ன­ரை­யும்­போல சீன நாட்­டி­ன­ரும் வழக்­க­மாக வந்­து­போ­க­லாம் என 11 தென்கிழக்­கா­சிய நாடு­களும் அறி­வித்­துள்ள போதி­லும் மலே­சியாவிலும் தாய்­லாந்­தி­லும் சிறி­ய­தொரு காட்­டுப்­பாடு அறி­மு­கப்படுத்­தப்­ப­டு­கிறது. அது­வும் சீனர்­க­ளைக் குறி­வைக்­க­வில்லை. வந்து இறங்­கும் அனைத்­து­லக விமா­னங்­க­ளின் கழி­வு­நீ­ரைப் பரி­சோ­த­னைக்கு அனுப்ப மலே­சியா ஏற்­பாடு செய்து உள்­ளது.

பொது சுகா­தார ஆய்­வுக்கூடத்­தில் 'பல்­ப­டி­யத் தொடர் வினை' முறை­யின்­கீழ் கழி­வு­நீர் பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­தன் மூலம் பய­ணி­களில் யாருக்­கா­வது கொவிட்-19 கிருமி தொற்றி இருந்­ததா என்­ப­தைக் கண்­ட­றி­வது இந்த ஏற்­பாடு. எல்­லாப் பய­ணி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

"எந்த ஒரு நாட்­டி­ன­ரி­ட­மும் பாகு­பாடு காட்­டக்­கூ­டாது என்­பது எங்­கள் நோக்­கம்," என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்து இருந்­தார். பரி­சோ­த­னைக் கட்­டுப்­பா­டு­கள் இல்லை என்­பது தெரியவரும் முன்­னரே இந்த வட்­டா­ரத்­தில் பயண ஆர்­வம் மிகுந்­து­விட்­டது.

மேலும், சீனா­வி­லி­ருந்து செல்­வோ­ரின் பய­ணம் மீளும் வேளை­யில் அவர்­க­ளுக்­காக தலை­சி­றந்த பகு­தி­யாக தென்கிழக்­கா­சி­யாவை 76 விழுக்­காட்டு சீனப் பயண நிறு­வ­னங்­கள் தரப்­ப­டுத்தி இருந்­தன. டிசம்­பர் மாதம் ஐடிபி சீனா என்­னும் வர்த்­த­கக் காட்­சி­யில் வெளி­யி­டப்­பட்ட ஆய்வு மூலம் இது தெரி­ய­வந்­தது.

சுற்­றுப்­ப­ய­ணம் சார்ந்த பொரு­ளி­ய­லுக்கு உகந்த வட்­டா­ர­மாக தென்­கி­ழக்­கா­சியா விளங்­கு­கிறது. சீனா­வி­லி­ருந்து வரு­வோர் இந்த வட்­டார கடற்­கரை பொழு­து­போக்கு, ஆடம்­ப­ரக் கடைத்­தொ­குதி, சூதாட்­டக்­கூ­டம் போன்­ற­வற்­றில் ஆர்­வம் செலுத்­து­வது வழக்­கம். கொவிட்-19 கார­ண­மாக கடந்த சில ஆண்­டு­க­ளாக அவை பெரி­தும் பாதிக்­கப்­பட்டு இருந்­தன. சீனர்­கள் மீண்­டும் வரு­வ­தன் மூலம் அந்­தப் பொழு­து­போக்­குக் கூடங்­க­ளின் வர்த்­த­கம் மீளும். எனவே சீனச் சுற்­றுப்­ப­ய­ணி­களை வர­வேற்க அவை தயா­ராகி வரு­கின்­றன.

2019ஆம் ஆண்­டில் 155 மில்­லி­யன் சீனர்­கள் வெளி­நாடுகளுக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து US$254.6 பில்­லி­யன் செலவு செய்­த­னர். அந்த ஆண்­டில், தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் ஒன்­றான வியட்­னா­முக்கு வந்து சென்ற 18 மில்­லி­யன் வெளி­நாட்­டி­ன­ரில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்­கி­னர் சீனா­வைச் சேர்ந்­த­வர்­கள்.

அதே­போல சிங்­கப்­பூ­ருக்கு வந்த அனைத்­து­ல­கப் பய­ணி­களில் ஐவ­ரில் ஒரு­வர் சீனா­வி­லி­ருந்து வந்­த­தோடு $900 மில்­லி­யனை அவர்­கள் செலவு செய்­த­னர்.