பல்லாயிரக்கணக்கானோர் மீண்டும் ஒன்றுகூடுவர் என எதிர்பார்ப்பு
சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் காவடிகளுடனும் பால்குடங்களுடனும் இவ்வாண்டு நடை ஊர்வலம் செல்லலாம்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கி அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் முடிவடையும் நடை ஊர்வலம் பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தொடங்கும்.
மறுநாள் 5ஆம் தேதி இரவு 11 மணி வரை அந்த ஊர்வலம் நடைபெற அனுமதி உண்டு.
3.2 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த நடை ஊர்வலம் சிராங்கூன் சாலையில் தொடங்கி சிலிகி, பிராஸ் பாசா, ஆர்ச்சர்ட் சாலைகள் வழியாக தேங் சாலையில் நிறைவடையும்.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இத்திருவிழா கொவிட்-19 நோய்த்தொற்று சூழலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசம் தொடர்பான நுழைவுச்சீட்டுகளை இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி வரை பெறலாம்.
பால்குடத்திற்கான நுழைவுச்சீட்டுகளை www.thaipusam.sg இணையத்தளத்தில் மட்டுமே பெற முடியும். கோவிலில் தயாரிக்கப்படும் பால்குடத்தின் கட்டணம் 20 வெள்ளியும் சுயமாக தயாரிக்கப்படும் பால்குடத்தின் கட்டணம் 15 வெள்ளியும் ஆகும்.
பால்காவடி மற்றும் தொட்டில் காவடிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை கோயில்களில் மட்டுமே பெற முடியும். மேலும், ரதக்காவடி மற்றும் அலகுக் காவடி நுழைவுச்சீட்டுகளை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மட்டுமே பெற முடியும். இக்கோயில்களில் இந்
நுழைவுச்சீட்டுகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பெறலாம்.
இத்திருவிழாவை இந்து அறக்கட்டளை வாரியமும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் இணைந்து நடத்துகின்றன. இவ்விழாவில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
“இவ்விழாவை கோயில் நிகழ்வென்று பாராமல் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் விழாவாகப் பார்க்கவேண்டும்.
"இத்திருவிழா இரண்டாண்டு
களுக்குப் பின்னர் சிறப்பான முறையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
"பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன," என்று கூறினார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர். அதிக அளவிலான பக்தர்களின் வரவைக் கணக்கில் கொண்டு விழாவன்று பக்தர்
களுக்கு உதவ பல தொண்டூழியர்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
"உணவு, தண்ணீர் மற்றும் இதர வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் மகிழ்வுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்
கிறோம்,” என்று கூறினார்
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் துணைத் தலைவர் ராமசாமி மெய்யப்பன்.
இவ்வாண்டு 10,000த்திற்கும் மேற்பட்ட பால்குடங்களும் 200க்கும் மேற்பட்ட காவடிகளும் பக்தர்களால் எடுக்கப்படும் என்றும் 20,000 பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஈராண்டுகளுக்குப் பிறகு விரிவான முறையில் தைப்பூசம் கொண்டாடப்படுவதை பக்தர்களும் ஆவலுடன் எதிர்நோக்கு கின்றனர்.
மோனலிசா